districts

img

உலக வரலாற்றில் பேசப்படும் அரசியலமைப்பு நம்முடையது காவல் துணை ஆணையர் பெருமிதம்

திருப்பூர், நவ. 26 - இந்தியா அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல் லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக சனிக்கிழமையன்று கல்லூரி வளாகத்தில்  அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார்  வரவேற்றார். சிறப்பு விருந்தினராக காவல் துணை ஆணையர் வனிதா கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார்.  துணை ஆணையர் வனிதா பேசுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உலக வர லாற்றில் சிறப்பு பெற்று விளங்குகிறது. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி கொண்ட நாடாக  நம் நாடு விளங்கி வருவதற்கு நம்முடைய அரசியலமைப்பு வழிவகுக்கிறது. நாகரிக சமு தாயத்தில்  உலகளாவிய கொள்கையில் பற்றுக் கொண்டு நாட்டின் ஒருமைப்பாடு மற்றும்  ஒற்றுமைக்கு வளர்ந்து வரும் ஆபத்தை கருத்தில் கொண்டு குழுக்கள் மற்றும் குடிமக்கள்  அடங்கிய, குழுக்களில் ஏற்படும் பிரச்சனைகளை அமைதியான வழிகளில் தீர்க்க வேண் டும், இந்திய அரசியலமைப்பு சட்டம் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்  ஆகியவற்றை உட்கொண்டு உருவாக்கப்பட்டது. நாம் அனைவரும் நம்முடைய அரசியல மைப்பு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். மேலும், அவற்றை பாதுகாக்க ஒவ்வொருவ ரும் தனிக்கவனம் எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறினார். பிறகு மாணவச் செயலர்கள் சுந்தரம், பூபதி ராஜா, ராஜபிரபு, அருள்குமார், அரவிந்தன்,  பூபாலன் ஆகியோர் தலைமையில் 70க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை  கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.