திருப்பூர், ஜூலை 1 - திருப்பூரில் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட காதுகேளா தோர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப் பின் நிர்வாகிகள் முதல்வரை சந்திக்க வாய்ப்பு வழங்க வேண்டும், காது கேளாதவ ருக்கு 80 சதவீதம் மேல் பாதிப்பு உள்ளவர்க ளுக்கு குரூப் 4 தேர்வு இல்லாமல், வேலை வாய்ப்பு வரிசை அடிப்படையில் அரசுத் துறையில் ஒரு சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், காது கேளாதவருக்கு ஆவின் பாலகம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பாக திருப்பூர் மாவட்ட காதுகேளா தோர் நலச் சங்கம் சார்பாக வெள்ளியன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் ஒரு பகுதியாக கோரிக்கை கள் அடங்கிய மனுவை காதுகேளாதோர் நலச்சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் சைகைகள் காண்பித்தவாறும், விசிலடித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி னர்.