நியாயமான சம்பள உயர்வு தந்தால் மட்டும்தான் இப் போது இருக்கும் நெருக்கடியான நிலையில் சமாளிக்க முடி யும் என்று பாத்திரத் தொழிலாளர்கள் ஒருமித்த குரலில் கூறு கின்றனர். திருப்பூர் அனுப்பர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாரம்பரியமான பாத்திரத் தொழில் நடைபெற்று வருகிறது. கால மாற்றத்தில், இத்தொழிலும் ஓரளவு நவீனம் வந்திருந் தாலும், அது இந்த தொழிலில் பெரிய அளவு உற்பத்தி வர்த்த கத்தில் ஈடுபடுவோருக்கே பலனளிப்பதாக உள்ளது. இந்த தொழிலை நம்பிப் பிழைக்கும் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்க்கை நிலையில் எந்த மாற்றமும் இல்லை. சிறு உற்பத்தி யாளர்களும் போராட்டமான சூழலையே சந்தித்து வருகின்ற னர்.கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் பழைய சம்பள ஒப்பந் தம் முடிவுக்கு வந்துவிட்டது. நீண்ட கால தாமதம், இழுத் தடிப்பு சூழ்நிலையில் பாத்திரத் தொழிலாளர் சம்பள உயர் வுக்கு தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி தொடர்ந்து முன்மு யற்சி எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பாத்திரத் தொழிலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று களத்தில் விசாரித்ததில் அவர்களது கருத்துகள் இதோ:
கே.மகேஸ்வரன்: நான் 35 வருசமா ஸ்டீல் வேலை செஞ் சுட்டு இருகேன். காலை 7 மணிக்கு வந்தா, ராத்திரி 7 மணி வரைக்கும் 12 மணி நேரம் வேலை செஞ்சா 350 ரூபாய் கிடைக்கும். கட்டிங், ஸ்பின்னிங், பாலிஸ் இந்த வேலை எல்லாம் முடிச்சா தான் எனக்கு வேலை. இப்போ விக்கிற விலைவாசிக்கு இந்த கூலிய வச்சி எப்படி குடும் பத்த ஓட்ட முடியும்? பீஸ் ஃபினிஸிங் ஆனாதான் கூலி, அது வம் 15 நாளைக்கு ஒரு வாட்டிதான் கிடைக்கும். இதனால வார வட்டிக்கு பணம் வாங்கித்தான் குடும்பத்த ஓட்ட வேண்டிய சூழல் இருக்குது. 1000 ரூபாய் வங்குனோம்னா அந்த காச கட்டுர வரைக்கும் வாரம் 200 ரூபாய் வட்டி கட்டணும். இங்க எதாவது அடி பட்டிருச்சுன்னா அந்த செலவையும் நாங்க தான் பாக்கணும். மருத்துவ செலவு போல பல செலவுகளுக்கு கூலிப்பற்று ஆகும். வருசத்துக்கு எப்படியும் 10 ஆயிரம் ரூபா யாவது பட்டறைல கடன் வாங்க வேண்டியதுவரும். தீபாவ ளிக்கு கழிக்கலாம்னு பாத்தா, வர்ர காசு நோம்பிக்கே சரியா இருக்கும். ஒருத்தர் ஒரு பட்டறைல 10 வருசம் வேலை செஞ்சா எப்படியும் 1 லட்சம் வரைக்கும் பட்டறைக்கு காசு குடுக்க வேண்டியதுவரும். இந்த காச குடுக்காம நாம வெளிய போக முடியாது. என் வேலைக்கு ஒரு பீசுக்கு 50 ருபாய் தாராங்க. 15 ரூபாயாவது கூலி உயர்வு கிடைச்சாத்தான் சமாளிக்க முடி யும். இந்த கடன் எல்லாத்தையும் கட்ட முடியும். கண்ணன்: நான் 15 வரு சமா இந்த ஸ்பின்னிங் வேலை செஞ்சிட்டு இருக்கேன். எனக்கு ஒரு சில்வர் குடத் துக்கு ரூ.7.50 காசு தர்ராங்க, பானைக்கு 6 ரூபாய். எனக்கு உதவியாளர் இல்லாம வேலை செய்ய முடியாது. இரண்டு பேருக்கு சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு வேல டீ செலவு 100 ருபாய் ஆகும். அதுவும் நான்தான் குடுக்க னும். ஒரு நாளைக்கு எனக்கு 500 ரூபாய் கிடைக்கும், சில நாள் 1000 ருபாய் கிடைக்கும். 3 வருசத்துக்கு முன்பு கூலி உயர்வு ஒப்பந்தமானது. அப்போ கேஸ் 600 ரூபாய்க்கு வித்தது. இன் னைக்கு 1200 ரூபாக்கு மேல வந்திருச்சு. எல்லா விலை யுமே ஜாஸ்தி ஆயிருச்சு கூலி மட்டும் உயரலை. ரூ.2.50 கூலி உயர்வு கிடைச்சாத்தான் இப்போ இருக்குற விலைவா சியை சமாளிக்க முடியும்.
லோகநாதன்: 30 வருசமா வெல்டிங் வேலை செய்யி றேன். எனக்கு அடி கணக்குல தான் கூலி. ஒரு அடிக்கு ரூ. 2.90 தான். ஒரு நாளைக்கு 200 அடி ஓட்டுனா ஒரு 500 ரூபாய் கிடைக் கும். 12 மணி நேரம் இந்த வேலை செய்யுறதால பார்வை பாதிக்கப்படுது. கண் எரிச்சல் ஏற்படும். கூலியை உயர்த்தி மூன்றரை வருசம் ஆச்சு. ரூ.1.50 கூலி உயர்வு கிடைச்சாத்தான் எங்க வாழ்வாதாரத்தை பாக்க முடியும். கபாலீஸ்வரன்: பித்தளை அண்டா வேலை கிட்டத்தட்ட 30 வருசமா செய்யுறேன். மருத் துவ செலவு, வீட்டு செலவு அது இதுன்னு பட்றையில ரூ.70 ஆயிரம் கடன் இருக்கு. இது எல்லாத்தையும் அடைக் கனும்னா 30 சதவீதமாவது கூலி உயர்வு கிடைக்கணும். சல்பர் மாதிரி ஆபத்தான கெமிக்கலை பயன்படுத்தி வேலை செஞ்சிட்டு இருக்கோம். எங்களுக்கு ஈஎஸ்ஐ, பிஎப் எதுவுமே இல்ல. நாளைக்கே எதாவது ஒன்னுன்னா யாரும் பாக்க மாட்டாங்க. எங்களுக்கு சமூக பாதுகாப்ப அரசு ஏற்ப டுத்தி தரணும். நாகலட்சுமி: நான் 40 வருசமா இந்த வேலை செஞ்சிட்டு இருக்கேன். இந்த பித்தளை பாத்திரத்த தேக்கிறத்துக்கு தேவையான சல்பர், புலி, மண் எல்லாத்தயும் நாங்க தான் வாங்கிட்டு வரனும். சின்ன அண்டா 5 தேச்சா ரூ.60 கிடைக் கும். தேக்கிறத்துக்கு வாங்குற பொருளுக்கு 30 ரூபாய் போயி ரும். மீதி 30 ரூபாய் தான் மிஞ்சும். தினமும் சல்பர் பயன்படுத் துறதால் விரல் நெகம் போயிருச்சு அது போக அல்சர் பிரச் சனை வரும். எனக்கெல்லாம் சாப்பிடவே முடியாது அல்சர் பிரச்சனை; காரம் சாப்பிட முடியாது; மருத்துவ செலவு ஜாஸ்தி ஆய்டேயிருக்கு. கண்டிப்பா கூலி உயர்வு கிடைச்சாத்தான் எங்க செலவையே பாக்க முடியும்.
இதுகுறித்து சிறிய பட்டறை உரிமையாளர் கூறுகை யில், சங்கத்தில் என்ன கூலி நிர்ணயிக்கப்படுகிறதோ அதைத்தான் நாங்கள் வழங்குவோம். பெரிய முதலாளிக ளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையில் நாங்கள் உள் ளோம். பித்தளை பாத்திரப் பொருட்கள் செய்ய நாங்கள் பெரும் முதலாளிகளிடம் இருந்து தகடு வாங்கி அண்டா போன்ற பொருட்களை செய்து தருவோம். கூலி உயர்த்தப் பட்டால் நாங்கள் உயர்த்தப்பட்ட கூலியை கடைமுதலாளி களிடம் கூறி தொழிலாளிகளுக்கு வாங்கித் தருவோம். இத னால் சில முதலாளிகள் இன்னொறு பட்டறைக்காரர் கம்மியா பண்றார் என்று சும்மா சொல்லி எங்களிடம் கூலியைக் குறைக்கிறார்கள். நீ அந்த ரேட்டுக்கு பண்ணு இல்லாட்டி நான் வேற பட்டறைக்காரருக்கு தகடு கொடுத்து பொருள் வாங்கிக்கிறேன் என்று சொல்கிறார்கள். அப்படி யாரும் குறைந்த கூலிக்கு செய்வதாகத் தெரிவதில்லை. ஆனால், முத லாளிகள் அவ்வாறு கூறுகிறார்கள். எங்களிடம் வேலை செய்பவர்களுக்கு வேலை தர வேண்டும். வேலை இல்லா விட்டால் வாரச்செலவுக்கு காசு தர வேண்டும். தொழிலாளி களுக்கு நிறைய கடன் கொடுத்துள்ளோம். அதை பெறுவ தற்கு வேலை தர வேண்டும். இதனால் சில சமயங்களில் குறைந்த கூலிக்கு தகடு வாங்கி பொருட்கள் செய்யும் சூழ லுக்கு நாங்கள் தள்ளப்படுகிறோம். கடை முதலாளிக ளுக்கும் சங்கம் இருக்கிறது. தொழிலாளிகளுக்கும் சங்கம் இருக்கிறது. எங்களைப் போன்ற சிறிய பட்டறை உரிமை யாளர்களுக்குள் ஒற்றுமை இல்லாததுதான் இதுபோன்ற குழப்பங்களுக்கு காரணம். பட்டறை உரிமையாளர்கள் என்று நாங்களும் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் நாங்களும் வேலை செய்தால் தான் எங்களுக்கு எதாவது கிடைக்கும். முன்பணம் வாங்கியவர்கள் இறந்துவிட்டால் அவர்களிடம் இருந்து வரவேண்டிய பணத்தை நாங்கள் யாரி டமும் கேட்க முடியாது. அவர்கள் குடும்பத்திற்கு எங்களால் முடிந்த எதாவது ஒரு உதவி செய்வோம். சிறு பட்டறைதாரர்க ளுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிச் செயல்பட்டால் மட் டுமே இப்பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும். மேலும், மூன்று வருடத்திற்கு கூலி உயர்வு ஒப்பந்தம் என்பதை மாற்றி வருடதிற்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட வேண்டும். அப்போதுதான் தொழிலாளிகளுக்கும், உரி மையாளர்களுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. இந்த தொழி லையும் காப்பாற்ற முடியும். பாத்திரத் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வு வழங்கினால் மட்டுமே தற்போதுள்ள நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை தொழி லாளர்கள் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்கள்.
(ந.நி)