districts

img

தொட்டில் கட்டி கொண்டு செல்லப்படும் கர்ப்பிணி மலை பகுதியில் சாலை வசதி இல்லாததால் அவலம்

திருப்பூர் ஜூலை 28- உடுமலை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகு தியில் நான்கு மாத கர்ப்பிணிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் சாலை வசதி இல்லாத மலைப் பாதையில் அப்பகுதி இளைஞர்கள் அவரை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில்  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் குழிப் பட்டி செட்டில்மெண்ட் அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு சாலை  வசதி, மின்சார வசதி மற்றும் மருத்துவ வசதி கள் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள்  பல ஆண்டுகளாக மிகவும் அவதிப்பட்டு வரு கின்றனர். சாலை வசதி இல்லாததால் நோயா ளிகளை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் நிலை உள்ளது.  இந்நிலையில் குழிப்பட்டி செட்டில் மெண்டை சேர்ந்த விஜயன் என்பவரின் மனைவி சரண்யா (வயது 28) நான்கு மாத கர்ப் பிணியாக இருக்கிறார். இவருக்கு திடீரென புதன்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற் பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றால் குழிப்பட்டியில் இருந்து கீழே பொன்னாலம்மன் சோலை வரை பல ஆயிரம் அடி மலைப்பகுதியில் அழைத்து செல்ல வேண்டும். சாலை வச தியோ, வாகன வசதியோ இல்லாத நிலையில்  சரண்யாவை அப்பகுதி இளைஞர்கள் தொட் டில் கட்டி கரடு முரடான மலைப்பாதையில் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி  வருகிறது. மலைவாழ் மக்களின் நலன் கருதி  குழிப்பட்டி செட்டில்மெண்ட் பகுதியில் சாலை வசதி அமைக்க வேண்டும் என  பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர்.

தொடரும் அவலம்

குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிக்கொட் டாம்பாறை, குருமலை உள்ளிட்ட ஐந்து  செட்டில்மெண்ட் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசரத் தேவைக்கு சமவெளிப் பகுதிக்கு வருவதற்கு சாலை வசதி இல்லை.  இங்கு வாழும் மலை மக்களுக்கு அவசர போக்குவரத்து தேவைக்கு குழிப்பட்டியில் இருந்து சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண் டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகி றது. பல போராட்டங்களையும் நடத்தி உள் ளது. எனினும் வனத்துறையும், மாவட்ட நிர் வாகமும் ஆய்வு செய்கிறோம் என்று சொல்வ தோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சாலை அமைப்பதற்கு அவர்கள் முன்வரவில்லை. குறிப்பாக புலிகள் காப்பக வனப்பகு தியாக அறிவித்து விட்டதால், மேற்படி செட் டில்மெண்ட் பகுதிகளுக்கு சாலை அமைக்க  முடியாது என்ற நிலையை அரசு நிர்வாகம்  மேற்கொண்டுள்ளது. ஆனால் காலங்கால மாக அந்த மலைகளில் பூர்வகுடி மலை மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களது அடிப்படை வாழ்வாதாரத் தேவையை நிறை வேற்ற வேண்டியது அரசின் கடமை என்று  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலி யுறுத்தி வருகிறது. எனவே அங்கு வாழும்  மக்களின் உயிரைப் பாதுகாக்கவும், கண்ணி யமான வாழ்வை உத்தரவாதப்படுத்தவும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டி யது அவசியமாகும் என்று மலை மக்களும்,  மலைவாழ் மக்கள் சங்கமும் வலியுறுத்து கின்றனர்.