districts

img

ரேசன் அரிசி கடத்திய வாகனத்தை சிறைபிடித்த சிபிஎம் - மாதர் சங்கத்தினர்

நாமக்கல், ஜன. 15- திருச்செங்கோடு அருகே வையப் பமலையில் ரேசன் அரிசி கடத்திய வாகனத்தை சிபிஎம் மற்றும் மாதர்  சங்கத்தினர் சிறை பிடித்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே வையப்பமலை ரேஷன்  கடை எண் 102 இல் புதனன்று ரேசன்  அரிசி மினி டெம்போவில் ஏற்றுக்  கொண்டிருக்கும் பொழுது மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் வாகனத்தை சிறை பிடித்து காவல்துறையினிடம் ஒப்படைத்தனர். வையப்பமலை மல்லசமுத்தி ரம் பிரிவு ரோடு சந்தை திடல் எதிரில்  உள்ள ரேசன் கடை எண் 102க்கு உட் பட்ட கடையில் 500க்கும் மேற்பட்ட  ரேசன் கார்டுகள் உள்ளது. இக்கடை யில் கடந்த சில மாதங்களாகவே ரேசன் பொருள்கள் வாகனத்தில் கடத்துவ தாக திருச்செங்கோடு வட்ட வழங்கல்  அலுவலரிடம் கம்யூனிஸ்ட் கட்சியினர்  நேரில் சென்று தகவல் அளித்தனர்.  ஆனால், எவ்வித நடவடிக்கையும்  எடுக்கப்படாமல் தொடர்ந்து இக்கடை யில் இரவு நேரங்களில் டெம்போ மூலம் ரேசன் அரிசி கடத்தி வந்தனர். இது குறித்து கேள்வி எழுப்பியவர்களை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப் படுகிறது.  இதனைறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வாகனத்தை சிறை  பிடிப்பது என முடிவெடுத்தனர். இதன் அடிப்படையில் மாட்டுப்பொங்கல் விடுமுறை நாளில் காலை 11 மணி யளவில் TN70J7686  நான்கு சக்கர வாக னத்தில் ரேசன் கடையிலும், ரேஷன்  கடைக்கு பின்புறம் உள்ள கர்ணன்  என்பவர் வீட்டில் இருந்தும் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.  இதனை மாதர் சங்க தலைவர் பழனியம்மாள் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாகனத்தை சிறை பிடித்து எலச்சி பாளையம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.  பின்னர் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை நாமக்கல் கீரம்பூரில் இயங்க வரும்  அதிகாரிகள் நேரில் வந்து வாகனத்தை  பறிமுதல் செய்து நாமக்கல் கொண்டு சென்றனர்.  ரேசன் அரிசி கடத்துவதாக புகார்  தெரிவித்த பின்னரும் எவ்வித நடவ டிக்கையும் மேற்கொள்ளாமல், கேள்வி  எழுப்பியவர்களை ரேசன் கடை ஊழி யர்கள் கொலை மிரட்டல் விடுத்த பின்ன ணியில், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும்  மாதர் சங்கத்தினர் காத்திருந்து கையும்  களவுமாக பிடித்த சம்பவம் அப் பகுதி மக்களிடையே பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.