கோவை, ஏப்.17- ஏப்ரல் 19ஆம் தேதி சரியான முடிவெடுத்தால், ஜூன் 4ஆம் தேதி நாட்டுக்கு விடுதலை கிடைக் கும், அதற்கு இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார், இந்தியா கூட்டணியின் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், கோவை தொகுதிக்குட் பட்ட ராஜவீதி, சூலூர், காளப்பட்டி பகுதிகளில் செவ்வாயன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், பாஜக ஆட்சி தொடர்ந்தால் மீண் டும் தேர்தல் நடக்குமா? என்பது சந்தேகம். தமிழகத்திற்கு ஒன்றிய அரசு கொடுக்கும் நிதி மிகக் குறை வானது, ஆனால், உத்தரப் பிரதே சத்திற்கு மட்டும் கூடுதல் நிதி ஒதுக்குகிறார். இச்செயல் தமிழ கத்தை வேண்டுமென்றே வஞ்சிக் கும் செயல். மதுரையில் எய்ம்ஸ் மையம் அமைப்பதற்காக உதயநிதி ஸ்டா லின் ஊர், ஊராகச் எடுத்துச் செல்லும் செங்கல்லை வைத்து ஒரு கோட்டையையே உருவாக்குவார். அந்தக் கோட்டை எங்களுக்கான கோட்டை. சகோதர சண்டையில் தமிழகத்திற்குள் அந்நியர்களை நுழைய விட்டு விட்டோம். இதை ஒரு இந்தியனாக சொல்கிறேன். எதிர்வரும் மக்களவைத் தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். ஏப்ரல் 19ஆம் தேதி சரியான முடிவெடுத் தால், ஜூன் 4ஆம் தேதி நாட்டுக்கு விடுதலை கிடைக்கும். வாய்ஜாலம் பேசுபவர்களின் பேச்சில் மயங்கி விடவும் கூடாது. ஒன்றிய அரசின் பெரிய உதவிகளின்றி, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியதுதான் தமிழகம். எனவே, இந்தியா கூட்டணி கோவை தொகுதி திமுக வேட்பாளருக்கு பேராதரவு தந்து வாக்களிக்க வேண்டும் என்றார்.