கோவை, ஜன.6- ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர் மங்களை வெளிக்கொணர உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசார ணைக்குழு அமைக்க வேண்டும் என வலியு றுத்தி கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுபஸ்ரீயின் சந்தேக மரணத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு குழு அமைக்க வேண்டும். அதுவரையில், ஈஷா மையத்தை இழுத்து மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநிலப் பொரு ளாளர் எம்.ஆறுமுகம் தலைமை தாங்கி னார். இதில், கோவை மாவட்ட செயலாளர் சி.சிவசாமி, துணைச்செயலாளர் மெள.குண சேகர், மாவட்ட பொருளாளர் சி.தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றவர்கள், சுபஸ்ரீ மரணத் திற்கு நீதி வேண்டும். மக்களிடையே ஈஷா மர் மங்களை களைய உரிய விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முழக் கங்களாக எழுப்பினர்.