கோவை, நவ.1- கனமழையால் கோவை சோமையம்பாளையம் குட்டையில், மதகு அருகே உடைப்பு ஏற்பட்டது. தக வலறிந்து உடனடியாக மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி தலையிட்டு, தண்ணீர் வெளியேறாமல் இருக்க உத் தரவிட்டு பணிகளை முடுக்கிவிட்டார். கோவை மாவட்டம், வடவள்ளி - சோமையம்பாளையம் வழியாக கஸ் தூரி நாயகம் பாளையம் அருகே உள்ள குட்டையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரண மாக நீர் நிரம்பியது. குட்டையின் மதகு அருகே உடைப்பு ஏற்பட்டு நீர் வெளி யேறியது. இதனால், அங்கு உள்ள தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப் பட்டும் அபாயம் ஏற்பட்டது. குட்டையில் இருந்து தண்ணீர் வெளி யேறினால், கஸ்தூரி நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள குடியி ருப்புகளில் உள்ள மக்கள் வெளியே வர இயலாத நிலை ஏற்படும். அங்கு இருந்து மூன்று கிலோ மீட்டருக்கு மேல் மாற்றுப் பாதையில் ஊரை சுற்றிச் செல்ல வேண் டிய நிலை உருவாகும். இந்நிலையில், குட்டையின் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறி வரு வதை செய்தியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். உடனடியாக தலையிட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, முதற்கட்டமாக தண்ணீர் வெளி யேறாமல் இருப்பதற்கு மணல் மூட்டை களை அடுக்கி வைக்கவும், அடுத்த டுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள வும் உத்தரவிட்டார். இதனையடுத்து குட்டையின் கரையை பலப்படுத்தும் பணிகள் உள்ளாட்சி நிர்வாகத்தால் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.