districts

கோவை வஉசி உயிரியல் பூங்காவில் 635 உயிரினங்கள் உள்ளன - வனத்துறை

கோவை, பிப். 27-  கோவை வஉசி உயிரியல் பூங்காவில், 635 உயிரினங்கள் வசித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். கோவை மாநகர் மக்களின் முக்கிய பொழுது போக்கும் இடமாக வஉசி உயிரி யல் பூங்கா விளங்குகிறது. ஆரம்பத்தில் இந்த பூங்காவில் சிங்கம், புலி, கரடி, மான் கள், குரங்குகள், பாம்புகள் மற்றும் பல் வேறு வகையான பறவைகள் பராம ரிக்கப்பட்டு வந்தது. இந்த வன விலங்கு களை நாள்தோறும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கண்டு ரசித்து வந்தனர். இந்நிலையில், இப்பூங்கா வில் ஒன்றிய வன உயிரின ஆணைய அதி காரிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்த பூங்காவில் மிக சிறிய இடத்தில் பரா மரிக்கப்பட்டு வந்த சிங்கம், புலி, கரடி உள் ளிட்ட ஆபத்தான விலங்குகளை வண்ட லூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அந்த விலங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், கோவை வஉசி பூங்காவை விரி வாக்கம் செய்து வன விலங்குகள், அதற் குரிய சூழலில் வசிக்கும் வகையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வன உயிரின ஆணைய அதிகாரிகள் தெரி வித்திருந்தனர். இதையடுத்து கோவை மாந கராட்சி அதிகாரிகள் வஉசி பூங்காவை விரி வாக்கம் செய்வதற்கான திட்ட அறிக்கை  தயார் செய்தனர். ஆனால், ஆண்டுகள் கடந்த போதும் விரிவாக்க பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து வன  உயிரின ஆணைய அதிகாரிகள் வஉசி பூங் காவின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தர விட்டனர். இந்நிலையில் வஉசி உயிரியல் பூங்கா வில் என்னென்ன பறவைகள், விலங்குகள் உள்ளன? என்பது குறித்து கணக்கெடுப்பு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி கோவை கோட்டவன அதிகாரிகளுக்கு, வன உயிரின ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து கோவை வனச்சரகர் அருண் தலைமையில் ஊழியர்கள் கோவை வஉசி பூங்காவில் உள்ள வன விலங்குகள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொண்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இக்கணக்கெடுப்பு பணி யின் முடிவில் மொத்தம் 635 உயிரினங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விரி வான அறிக்கை தயார் செய்யப்பட்டு சென்னை வன உயிரின ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது, என்றனர்.