districts

img

‘பைக் டாக்ஸி’ நடைமுறையை தடை செய்திடுக சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆவேசம்

கோவை, செப்.24- தமிழ்நாட்டில் ‘பைக் டாக்ஸி’ நடைமுறையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ‘பைக் டாக்ஸி’ நடைமு றையை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் அபராத நடைமு றையை திரும்பப்பெற வேண்டும். வாகன ஓட்டிகளை கொலை குற்ற வாளிகளாக சித்தரிக்கும் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட் டத்தை திரும்பப்பெற வேண்டும். மீட்டர் கட்டணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சுங்கச்சா வடிகளை அகற்ற வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி செவ்வாயன்று சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மாநி லத் தழுவிய போராட்டத்தில் ஈடுபட் டனர். அதன்ஒருபகுதியாக கோவை மாவட்டம், பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஆட்டோ தொழிலாளர்கள் முற்று கையிட்டனர். இப்போராட்டத் திற்கு, சிஐடியு ஆட்டோ தொழிற்சங் கத்தின் மாவட்டத் தலைவர் இரா.செல்வம் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், மாவட்டப் பொரு ளாளர் ஆர்.வேலுசாமி, மாவட்ட துணைத்தலைவர் கே.ரத்தின குமார், ஆட்டோ சங்க பொதுச்செய லாளர் முத்துக்குமார், பொருளா ளர் மைக்கேல், சாலைப்போக்கு வரத்து சங்க பொதுச்செயலாளர் ரபீக், பொருளாளர் பாலுசாமி திர ளானோர் கலந்து கொண்டனர். முடி வில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளர்களை காவல் துறையினர் கைது செய்த னர். நாமக்கல் நாமக்கல் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க மாவட்டத் தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, ஆட்டோ தொழிலாளர் சங்க செய லாளர் பாஷா, பொருளாளர் சிலம்ப ரசன், மாவட்ட நிர்வாகி சிவக்கு மார் உட்பட திரளான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர். ஈரோடு ஈரோடு மேற்கு வட்டார போக்கு வரத்து அலுவலகம் முன்பு, சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க மாவட்டத் தலைவர் சி.வடிவேல் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம், துணைத்தலைவர் என்.முருகையா, சாலைப் போக்கு வரத்து சங்க பொதுச்செயலாளர் பி.கனகராஜ், ஆட்டோ தொழிலா ளர் சங்க செயலாளர் எஸ்.ஷேக்தா வூத் (எ) கண்மணி, பொருளாளர் கே.ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வட்டார போக்குவரத்து அலுவலர் வழியாக போக்குவரத்து ஆணையாள ருக்கு கோரிக்கை மனு அனுப்பப் பட்டது.