கோவை, ஆக.9- உக்கடத்தில் இருந்து ஆத்துப் பாலம் வரையில் செல்லும் மேம் பாலம் ரூ.481.95 கோடி மதிப்பீட் டில் கட்டப்பட்டது. இப்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மக்கள் பயன்பாட் டிற்கு அர்ப்பணித்தார். கோவை அரசு கல்லூரி வளா கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று தமிழ்புதல் வன் திட்டத்தை துவக்கிவைத்தார். இதன்பின் பாரதியார் பல்கலைக் கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறைகளுக்கான புதிய கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தக் கல்லூரியில் நுழைந்த உடன் நீங்கள் கொடுத்த உற்சாக வரவேற்பிற்கு நன்றி. இது அன்பான, பாசமான, சேவை மனப்பான்மை உள்ள மக்கள் வாழும் பகுதி. இந்த மண்டலம் தொழில் துறையில் சிறந்த மண்டலம். சிறந்த கல்வி நிலையங்கள் கொண்ட மண்டலம். பழமையும், புதுமையும் கலந்த பகுதி. இப்பகுதி மக்கள் பெரிய வர்களை மதித்தல் மற்றும் விருந் தோம்பல் பண்பில் சிறந்து விளங்கு கின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மக்களுக்கு பயனளிக்கும் ஏராள மான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நாட்டிற்கே தமிழ்நாடு தான் முன்னோடி என்று சொல்லும் வகையில் திட்டங்களை செயல் படுத்தி வருகிறோம். பெண்கள், மாண வர்களுக்கு பார்த்து பார்த்து திட் டங்களை செய்கிறோம். 518 கோடி முறை பெண்கள் கலைஞர் விடியல் மகளிர் பயணத் திட்டத்தைய் பயன் படுத்தி உள்ளனர். மகளிர் உரிமை திட்டம் மூலம் 1 கோடி 15 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயி ரம் ரூபாய் வழங்கப்படுகிறது. காலை உணவுத் திட்டம் மூலம் 20 லட்சம் மாணவர்கள் பயன்பெறு கின்றனர். நிறைய திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகி றது. இருப்பினும் சில திட்டங்கள் தான் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த தமிழ் புதல்வன் திட்டம் உள்ளது. மாணவர்கள் கல்வி கற்க எதுவும் தடையாக இருக்ககூடாது என இந்த அரசு நினைக்கிறது. மாண வர்கள் அடுத்தடுத்த உயரத்திற்கு செல்ல வேண்டும் என்கிற அக் கறையோடு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. கோவை அர சுக் கலைக்கல்லூரி மாணவர்க ளின் கோரிக்கையை ஏற்று அரசு கல் லூரி மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதி மற்றும் கருத்தரங்கக் கூடம் கட்டித் தரப்படும், என்றார்.
ஆத்துப்பாலம் – உக்கடம் பாலம் திறப்பு
இதனைத்தொடர்ந்து, கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற் றும் பாலக்காடு செல்லக்கூடிய பிர தான சாலைகளை இணைக்கும், ஆத்துப்பாலம் - உக்கடம் இடையே யான சாலை மிகுந்த போக்குவ ரத்து நெரிசலுடன் இருந்து வந்தது. இந்நிலையில், தமிழக நெடுஞ்சா லைத்துறை சார்பில், ஆத்துப்பா லத்தில் இருந்து உக்கடம் வரை சுமார் 3.8 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.481.95 கோடி மதிப்பீட்டில் மேம் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இப்பணிகள் சற்று மந்தமாக நடைபெற்று வந்த நிலை யில், கடந்த 3 ஆண்டுகளாக மேம்பா லம் கட்டும் பணிகள் தீவிரமடைந்து, நிறைவடைந்தது. இந்த உக்கடம் மேம்பாலத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெள்ளியன்று திறந்து வைத்தார். பின்னர் அப் பாலத்தின் வழியாகச் சென்று பார் வையிட்டார். இதனையடுத்து, கோவை கணி யூரில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் உருவச்சிலையை, முதல்வர் திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ. வேலு, சு.முத்துசாமி, பி.கீதா ஜீவன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் ஆர்.ரங்கநா யகி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார், கே.ஈஸ்வரசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, திமுக மாவட்டச் செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்ட திமுக நிர் வாகிகள் பங்கேற்றனர்.