தருமபுரி, பிப்.19- தருமபுரி அருகே பயணிகளிடம் வாக்க ளிக்க அனுமதிகேட்டு, பேருந்தை நிறுத்தி விட்டு வாக்களித்து வந்த தனியார் பேருந்து ஓட்டுநரின் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டிலி லிருந்து சேலம் செல்லக்கூடிய தனியார் பேருந்தின் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். அவர் தனது வாக்கை பொம்மிடி அரசு மேல்நிலைப் பள்ளியிலுள்ள வாக்குச்சா வடியில் செலுத்த வேண்டும். ஆனால், பணி யின் காரணமாக வாக்களிக்க முடியாத நிலையில், அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடி வழியே பேருந்து சென்றபோது, பேருந்தி லிருந்த பயணிகளிடம் 10 நிமிடம் அனுமதி கேட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு வாக்களித்து விட்டு மீண்டும் பேருந்தை இயக்கினார்.