கோவை, ஜூன் 13– விலைவாசி உயர்வை மறைக்க மதக்கலவரங்களுக்கு பாஜக தூபம் போடுவதாக மறைக்கப்பட்ட கோவை யின் விடுதலை போராட்ட வரலாறு மாநாட்டில் தலைவர்கள் குற்றஞ்சாட் டினர். கோவையில் மே பதினேழு இயக் கம் சார்பில் கோவையின் மறைக்கப் பட்ட விடுதலை போர் வரலாறு என்கிற மாநாடு சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் சாலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செய லாளர் வைகோ பேசுகையில், உள் துறை அமைச்சர் அமித்ஷா வரலாற்று சம்பவங்கள் தொடர்பாக தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். பாஜக தில்லி ஊடகப்பிரிவு தலைவர் நவீன் குமார் ஜிண்டால், பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர்சர்மா ஆகியோர் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசி யதை கண்டிக்கிறோம். இந்தியாவை இஸ்லாமிய நாடுகள் கண்டித்து இருக்கின்றன. சுதந்திர போராட்டத்திற்காக போராடிய போராளிகளுக்கு கோவை யில் இஸ்லாமியர்கள் உணவு, இடம் கொடுத்து ஆதரித்தனர். விடுதலைப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு பெரிது. ஒற்றை மனிதனாக ஆங் கிலேயப் படையை விரட்டி அடித்தவர் தீரன் சின்னமலை. சாதி, மதம், இனம் உணர்வுகளைக் கடந்து தமிழன் விடு தலை போரட்டத்தில் ஈடுபட்டதை வைகோ நினைவுகூர்ந்தார். நினைவு சின்னம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், அமித்சாவிற்கு கோட் சேவை மட்டும்தான் தெரியும். விடு தலை போராட்ட வரலாறை மூடி மறைத்தால் எதிர்வினைதான் ஏற்ப டும். விலைவாசியை மறைத்துவிட்டு மதக்கலவரங்கள் நடத்த பாஜக நினைக்கிறது. பாஜக அரசு நபிகள் நாயகம் குறித்து பேசியவர்களை கட்சி யில் இருந்து நீக்கியுள்ளனர். ஆனால், கைது செய்யவில்லை. ஆளுநர் ரவியை அண்ணாமலை போல் நேரடியாக கட் சியில் சேர்ந்து கொள்ளுங்கள். பாஜக விற்கு விசுவாசமாக இருங்கள். தமிழ கத்திற்கு ஆளுனராக இருக்காதீர்கள். கடந்த எட்டு ஆண்டில் பல்வேறு உரி மைகள் பறிக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சி சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சி. 200 ஆண்டுக்கு முன்பு வெள்ளையர்களை எதிர்ப்பதற்காக ஒன்றுபட்டது போல நாம் தற்போது ஒன்றுபட வேண்டும். கோவையில் கோவை மறந்த வரலாறு நினைவுச்சின்னம் அமைக்க வேண் டும், என்றார்.
கனவிலும் நினைக்கக்கூடாது
தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன் பேசுகையில், கோவை யில் இந்து - முஸ்லீம் கலவரத்தை தூண்ட யாரும் இனி கனவிலும் நினைக் கக்கூடாது என்பதற்காக தான் இந்த மாநாடு, என்றார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக…
மனிதநேய ஜனநாயக கட்சி தலை வர் தமிமுன் அன்சாரி பேசுகையில், வட இந்தியாவின் சதிசெயலுக்கு தமி ழர்கள் ஒருபோதும் பலியாகமாட்டார் கள். வரும் நாடாளுமன்ற தேர்தலுக் காக வட இந்தியாவில் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர், என்றார்.
வரலாறு புல்டோர் மூலம் இடிக்கப்படுகிறது
மனிதநேய மக்கள் கட்சியின் தலை வர் ஜவாஹிருல்லா பேசுகையில், வீடுகளை மட்டுமல்ல, வரலாற்றை யும் புல்டோசர் மூலம் இடித்து கொண் டிருக்கிறது பாஜக. திப்பு சுல்தான் மதங் களை கடந்து மாமன்னனாகவும் மட்டு மின்றி, மதச்சார்பற்ற மன்னனாகவும் விளங்கினார். இது போன்ற வரலாறு கள் மறக்கடிக்கப்படுகிறது. இதை பாஜக செயல்படுத்தி வருகிறது. தீரன் சின்னமலை, திப்பு சுல்தானுடன் இணைந்து தோளோடு தோள் நின்று போராடினார். இந்த வரலாற்றை மறைக் கிறார்கள். தீரன் சின்னமலையின் படையில் ஏராளமான முஸ்லிம்கள் இருந்துள்ளனர் அந்தமான் சிறையில் அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டு சென்றவருக்கு நாடாளுமன் றத்தில் சிலை வைத்துள்ளார்கள். விடுதலைப் போராட்டத்தில் ஓடிய வர்களை ஹீரோவாக சித்தரிக்கப்பட் டுள்ளனர். காட்டிக்கொடுக்க கூடாது என்று தனது கழுத்தை அறுத்து கொண்ட முகமது ஹாசன் எங்கே? மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த சாவர்க்கர் எங்கே? காந்தியின் விடு தலை போராட்டமாக இருக்கட்டும், நேதாஜியின் போராட்டமாக இருக்கட் டும்; அதில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ள னர். வரலாற்றை தகர்க்கும் புல்டோ சர்களை தகர்ப்போம், என்றார்.
அம்பேத்கரை இந்துத்துவாக மாற்றும் முயற்சி
மாநாட்டின் நிறைவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், கோவையை மையமாக வைத்து முதல் சுதந்திர போராட்டத்தில் 42 பேரில் 36 பேர் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வரலாற்று இருட்டடிப்பும், வரலாற்று திரிப்பும் காலம் காலமாக உள்ளது. ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் அடிப்படையில் பாஜக பன்மைதன்மையை சிதைத்து வருகிறது. மதம், மொழி, சாதியை கடந்து ஆங்கிலேயரை எதிர்த்து அன்று ஒன்று சேர்ந்து செயல்பட்ட னர். சேரர், சோழர், பாண்டியர் முழு வரலாறு பற்றி அமித்சாவுக்கு கவலை. கோவையை அடித்தளமாக வைக்க பாஜக செயல்படுகிறது. இஸ்லாமியர் களுக்கு எதிரான உளவியல் கட்ட மைப்பை வைத்து பாஜக செயல்படுத் துகிறது. அருந்ததியர்களை கைப் பற்ற பாஜக வேலை செய்கிறது. அப் படிப்பட்ட கோவையில் இந்த மாநாடு நடைபெறுவது பாராட்டுக்குரியது, என்றார். “அண்ட புழுகு. ஆகாச புழுகை” பாஜக கட்டவிழ்க்க முயல்கிறது. ஆர்எஸ்எஸ் காரராக ஆளுநர் செயல் படுகிறார். ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை பார்க்காமல், அடுத்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். திரா விடம் என்ற கருத்தை அவர்கள் எதிர்கிறார்கள். பெரியார் குறிவைக்க படுகிறார். திருவள்ளுவருக்கு காவி அணிவிக்கிறார்கள். அம்பேத்கரை இந்துத்துவ அடையாளமாக ஆர்எஸ்எஸ் காட்டுகிறது. வரலாற்றை திணிக்கிறார்கள். தமிழ்நாட்டை குறிவைத்துவிட்டார்கள். கோவை யில் இருந்து தமிழகத்தை கபளிகரம் செய்ய முயற்சிக்கிறார்கள். அதிமுக எதிர்கட்சியாக இல்லாமல் பாஜக வளர செயல்படுகிறது. அதிமுகவை காலி செய்கிறார்கள். எல்லோரும் இந்து என்று சான்றிதல் போடமுடி யுமா? அதை சனாதனம் ஒத்துகொள் ளுமா? இந்து ஒற்றுமையை அவர் கள் விரும்பவில்லை. இந்துக்களின் வாக்கை தான் விரும்புகிறார்கள். சங் பரிவாரங்களின் திட்டத்தை முறிய டிக்க அனைவரும் அகில இந்திய அள வில் ஒன்றுபட வேண்டும், என்றார்.