கோவை, ஜூன் 24- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சனி யன்று அன்னூர் ஆட்டுச் சந்தையில் ஆடு களை வாங்க வியாபாரிகள் குவிந்தனர். கோவை மாவட்டம், அன்னூர் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் தான் பிர தான தொழிலாக உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் சேர்ந்து ஆடு வளர்ப்பை யும் செய்து வருகின்றனர். அன்னூரை சுற்றி யுள்ள பகுதிகளில் புல்வெளிகள் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள் அதிகளவில் உள்ள தால், ஆடுகளை கிராம மக்கள் வளர்த்து வரு கின்றன. இந்நிலையில், அன்னூரில் வாரந் தோறும் சனியன்று சந்தை நடைபெறும். இந்த சந்தையில் விவசாயிகள் ஆடுகளை விற் பனை செய்வது வழக்கம். பக்ரீத் பண்டி கைக்கு சில தினங்களே உள்ள நிலையில், அன்னூர் சந்தையில் அதிகாலை 5 மணி முதலே ஆடுகள் விற்பனை களைகட்டி யுள்ளது. விவசாயிகள் ஆட்டு சந்தை தொடங் கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென் றனர். குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் வந்திருந் தனர். இதில் வெள்ளாடு, குரும்பாடு, செம் மறியாடு, மலையாடு உட்பட பல்வேறு வகை யான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வரு கின்றன. குட்டிகள் ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், திடகாத்திர மான உடல்வாகுடன் சற்று எடை அதிகம் உள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை யிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. காலை முதல் தற்போது சுமார் ரூ.1.5 கோடி வரை வியாபாரம் நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி இதேபோன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சி சந்தையில் வாரந்தோறும் வியாழனன்று ஆட்டு சந்தை நடைபெறும். அதன்படி இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக் கடவு, கோட்டூர் மற்றும் உடுமலை சுற்று வட்டார பகுதிகளிலிருந்து செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால், சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வரத்து அதிகரித்ததாலும் சந்தையில் ஆடு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. சுமார் 800 முதல் 1000 ஆடுகள் வந்தன. 5 கிலோ தல் 30 கிலோ வரை எடைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனை ஆனது. கடந்த மாதம் 30 கிலோ கொண்ட ஆடு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை விற் பனை ஆனது. பக்ரீத் பண்டிகையையொட்டி வரத்து அதிகரித்தும், விலை குறைய வில்லை. மேலும், 30 கிலோ கொண்ட செம்மறி ஆடு, வெள்ளாடு ரூ.32 ஆயிரம் வரையிலும், கிடா ரூ.38 ஆயிரம் வரையும் விற்பனை யானது. கேரளாவில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி சென்றனர்.