districts

பணத்தை பெற்றுக்கொண்டு சிலிண்டர் வழங்காத ஏஜென்சி

நாமக்கல், டிச.13- பணத்தைப் பெற்றுக் கொண்டு சிலிண்டர் வழங்காத கேஸ் ஏஜென் சிக்கு ரூ. 7,500 இழப்பீடு வழங்க நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள செக்கு பட்டி யில் வசிப்பவர் சீனிவாசன் மகன் ராஜு(38).  இவர் நாமக்கல் நகரில்  உள்ள சமையல் கேஸ் சிலிண்டர் விநி யோகிக்கும் நிறுவனத்தில் (மாருதி கேஸ் சர்வீஸ்) வாடிக்கையாளராக உள்ளார். இந்த நிறுவனத்திற்கு கடந்த 2019 டிசம்பர் மாதத்தில் இவர் எச்பி நிறு வன சிலிண்டரை பெறுவதற்காக ரூபாய்  715/- ஐ இணையதளம் மூலமாக செலுத் தியுள்ளார். பணம் செலுத்தி இரண்டு வாரங்கள் கழித்தும் சிலிண்டர் வராத தால் இணையதளத்திற்கு சென்று  பார்த்த போது சிலிண்டர் வழங்கப்பட் டதாக இருந்துள்ளது. இது குறித்து கேஸ் ஏஜென்சி மேலாளரிடம் நேரில் சென்று கேட்டபோது, விரைவில் சிலிண் டர் வந்து விடும் எனவும், மானிய  தொகையும் கணக்கில் வரவு வைக்கப் பட்டு விடும் என தெரிவித்துள்ளார். ஆனால், கேஸ் ஏஜென்சியினர், சீனி வாசனின் பெயரிலேயே மீண்டும் சிலிண்டருக்கு பதிவு செய்துவிட்டு, சீனிவாசனின் அம்மாவிடம் ரூ 715ஐ பெற்றுக்கொண்டு சிலிண்டரை வழங் கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த  சீனிவாசன் கடந்த 2020 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன் றத்தில் கேஸ் ஏஜென்சி மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  விசாரணை முடிவடைந்த நிலை யில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் மற்றும்  உறுப்பினர் ஆர். ரமோலா ஆகி யோர் தீர்ப்பளித்தனர். இதில் வழக்கு  தாக்கல் செய்த சீனிவாசன் செலுத்திய பணத்திற்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்ப டவில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ள தால், கேஸ் ஏஜென்சி மீது வழக்கு  தாக்கல் செய்தவருக்கு, சிலிண்டருக் காக செலுத்திய தொகை ரூ 715, சேவை  குறைபாட்டால் ஏற்பட்ட இழப்பீட்டிற்கு ரூ.7,500 மற்றும் வழக்கின் செலவுத் தொகை ரூ. 1,000  ஆக மொத்தம் ரூ.9,315 ஐ நான்கு வாரங்களுக்குள் மனு தாரருக்கு வழங்க வேண்டும் என  உத்திரவிட்டனர்.