திருப்பூர், மார்ச் 22- செயற்கை நூலிழையில் தயாரிக்கப்ப டும் குளிர் கால ஆடைகளைக் காட்சிப்படுத் தும் 49 ஆவது இந்தியா நிட்பேர் கண்காட்சி புத னன்று திருப்பூரில் துவங்கியது. திருப்பூர் ஐ.கே.எப்.ஏ, ஆயத்த ஆடை ஏற் றுமதி மேம்பாடு கழகம், திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கம் சார்பில் ஆண்டுக்கு இரு முறை இந்திய ஆயத்த ஆடைகள் சர்வதேசக் கண்காட்சி நடத்தப்படும். அந்த வகையில், அனைப்புதூர் அருகில் உள்ள ஐ.கே.எப்.ஏ வளாகத்தில் குளிர்கால ஆடைகள் மற்றும் துணி ரகங்கள் அணிவகுக்கும் 49ஆவது கண் காட்சியை, பிராண்ட்ஸ் அண்ட் சோர்சிங் லீட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் சுவா மிநாதன் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இதில் இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் (பியோ) தலைவர் ஏ.சக்தி வேல், ஏ.இ.பி.சி., தலைவர் நரேந்திர கோயங்கா முன்னிலை வகித்தனர். கே.டி. எம்.இ.ஏ., தலைவர் பி.கோபாலகிருஷ்ணன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்பிரமணியன், ஜவுளி வர்த்தக முகமை கூட்டமைப்பு தலைவர் வி.இளங்கோ வன், ஆயத்த ஆடை மற்றும் கைத்தறி ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் அஜய் அகர் வால் உட்பட பலர் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு துவங்கப்பட்ட இந்த கண்காட்சி வெள்ளியன்று வரை மூன்று நாட்களுக்கு காலை 10 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. 70 அரங்குகளில் செயற்கை நூலிழை ஆடைகள், மறு சுழற்சி ஆடைகள், பேபி கேரிங் ஆடைகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. கண்காட்சியில் ஈர்த்த சாக்ஸ் ஸ்டோர் திருப்பூரில் நடைபெற்று வரும் ஆயுத்த ஆடை கண்காட்சியில் விளையாட்டு வீரர் களுக்கு என்று தனித்துவமாக உருவாக்கப் பட்டுள்ள சாக்ஸ் ஸ்டோர் தனி கவனம் பெற் றது. விளையாட்டு வீரர்கள், குழந்தைகள்,
நோயாளிகள் பயன்படுத்தும் சாக்ஸ் ரகங் கள் தனித்து தெரிந்தது. இந்த கண்காட்சியில் பெரும்பாலும் ஸ்வெட்டர்கள், ஹூடு பனியன் ரக ஆடைகள் அதிகளவில் இடம் பெற்றிருந்தன. இதில், முதல் முறையாக தேனியிலிருந்து வந்திருந்த லட்சுமி டெக்ஸ் ஸ்டால் அமைந்திருந்தது. காட்சிபடுத்தப்பட்டுருந்த துணிப்பைகள், நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையி லும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாதவ கையில் துணிகளால் உருவாக்கப்பட்டிருந்த தோற்பைகள், சிறிய ரக சிற்றுண்டி பைகள், மணி பர்ஸ்கள், டிராவல் பைகள் இந்த கண் காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சி துவங்கி வைத்த பின் செய்தி யாளர்களை சந்தித்த ஆதித்யா குழுமங்க ளின் செயல் அதிகாரி ராமச்சந்திரன், 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த திருப்பூர் தற் போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, உலக அளவில் செயற்கை முறையில் உரு வாக்கப்படும் நூல்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை வரவேற்பு பெற்றுவருகிறது. திருப்பூர் மாவட்டம் அதன் பாதையில் செல்ல துவங்கி இருக்கிறது நிச்சயம் இது வளர்ச்சி பெறும் என கூறினார்.