திருப்பூர், ஜன.23 - தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 21 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. திருப்பூர் காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில் வியாழக்கிழமை மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரிப் பன் வெட்டி புத்தக கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். திருப் பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தலைமை ஏற்றார். மாநில மனி தவள மேலாண்மை துறை அமைச் சர் என்.யல்விழி செல்வராஜ், மாந கர மேயர் ந.தினேஷ்குமார், மாநக ராட்சி ஆணையர் ராமமூர்த்தி, பின் னல் பிக் ட்ரஸ்ட் நிர்வாகிகள் உள் பட பலர் கலந்து கொண்டனர். மேலும், சிந்து சமவெளி நாகரிக வடிவமைப்பை பார்வையிட்டனர். இப்புத்தக கண்காட்சி நாள்தோறும் காலை, 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும். ஒவ் வொரு நாளும் மாலை கலை, இலக் கிய நிகழ்வுகள் நடைபெற உள் ளது. இரண்டாம் நாள் ஜன.24 திரைப்பட இயக்குனர் கரு.பழனி யப்பன், 25 ஆம் தேதி பவா.செல்ல துரை, பேராசிரியர் நசீரா ஆகியோர் பேசவுள்ளனர். 26 ஆம் தேதி பால சந்திரன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு) பேசுகி றார். 27 ஆம் தேதி கவிஞர் நெல்லை ஜெயந்தா குழுவினரின் கவிய ரங்கம், 28 ஆம் தேதி திருப்பூர் காவல் ஆணையர் எஸ்.ராஜேந்தி ரன், காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஸ் அசோக், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எஸ்.ராம மூர்த்தி ஆகியோர் பங்கேற்று, கலை இலக்கியத் திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வ, மாண விகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசுகின்றனர். 29 ஆம் தேதி, திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பரிசளிப்பு விழா நடக்கி றது. இதில் ஜெகத் கஸ்பர் பேசுகி றார். 30 ஆம் தேதி எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகின்றனர். 31 ஆம் தேதி தமிழக அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெய ரஞ்சன், உ.அலிபாவா ஆகியோர் பேசுகின்றனர். பிப்.1 ஆம் தேதி கவி ஞர் ஜீவபாரதி, கவிஞர் மகுடேஸ் வரன் ஆகியோர் பேசுகின்றனர், நிறைவு நாளான, பிப்.2 ஆம் தேதி முனைவர். கு.ஞானசம்பந்தன் குழுவினரின் பட்டிமன்றம் நடை பெற உள்ளது. முன்னதாக திருப்பூர் புத்தகத் திருவிழாவையொட்டி, மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக் கது.