சேலம், அக்.13- ஏற்காடு அருகே உள்ள போதைப் பொருள் பயன்பாடு இல்லாத கிராம மான தலைச்சோலைக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஏற்காட்டில் இருந்து 7 கி.மீ தொலை வில் உள்ள கிராமம் தலைச்சோலை. இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்ட ஆய்வின் முடி வில் கஞ்சா இல்லாத கிராமம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபி னவ் அறிவித்துள்ளார். இதைத்தொ டர்ந்து காவல் கண்காணிப்பாளர் அபி னவ், துணை காவல் கண்காணிப்பாளர் தையல்நாயகி, ஏற்காடு ஆய்வாளர் செந் தில் ராஜ்மோகன் உள்ளிட்ட அதிகாரி கள் கிராமத்திற்கு சென்று அங்கு வசிக் கும் மக்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுதொடர்பாக அபி னவ் கூறுகையில், முதல் முறையாக தமி ழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. ஆய்வில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு இல்லாத கிராமம் என ஏற்காடு தலைச் சோலை கிராமம் என தெரியவந்துள் ளது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து போதைப்பொருள் இல்லாத கிராமம் என அறிவிப்பு பலகை வைக்க வலியுறுத்தி உள்ளேன். கிராம மக்களும் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். யாரேனும் போதைப் பொருள் விற்க முயன்றால் உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியப் படுத்த வேண்டும் என கேட்டுக்கொண் டார்.