districts

img

தீர்வுக்கு முன்வராத ஜவுளி வியாபாரிகள்: போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு

திருப்பூர், ஜன.12– விசைத்தறியாளர்கள் முன்வைத் துள்ள கோரிக்கையின் மீது நியாய மான தீர்வு காண முன்வராமல் இழுத்த டிக்கும் போக்கை விசைத்தறி ஜவுளி வியாபாரிகள் கடைப்பிடிப்பதால், ஊர் தோறும் கூட்டுக் கூட்டம் நடத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது என்று விசைத்தறி யாளர் சங்க கூட்டமைப்பும், தொழிற் சங்கங்களும் தீர்மானித்துள்ளனர். கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறியாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்  புதன்கிழமை மாலை சுல்தான்பேட்டை  அம்மன் கலையரங்கத்தில் நடைபெற் றது. இதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக் கப்பட்டது: கோவை, திருப்பூர் மாவட் டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் மூலம் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஏழாண்டுகளுக்கு மேலாக நெசவுக் கூலி உயர்வு கொடுக்காமல் ஜவுளி  வியாபாரிகள் மறுத்துவரும் நிலையில் கடந்த  ஆண்டு நவம்பர் மாதம் அரசுத்  தரப்பில் பல்லடம் ரக துணி உற்பத் திக்கு 20 சதவிகிதம், சோமனூர் ரக துணி உற்பத்திக்கு 23 சதவிகிதம் கூலி  உயர்வு வழங்க வேண்டும் என்று உத்த ரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த  உத்தரவையும் அமல்படுத்த ஜவுளி வியாபாரிகள் மறுத்து வருகின்றனர்.  இதையடுத்து கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங் கங்கள் கூடிப் பேசி, அரசு அறிவித்த  கூலி உயர்வை வழங்க வலியுறுத்தி  ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரை யற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி 4 ஆவது நாளான புதன்கி ழமையும் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் செவ்வாய்க் கிழமை கோவையில் நடந்த பேச்சு வார்த்தையும் பெயரளவில் நடந்த தால், விசைத்தறி வேலை நிறுத்தத்தை  வேகப்படுத்துவது எனவும், அதற்காக விசைத்தறி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் இணைந்த ஆலோ சனை கூட்டத்தை ஊர்வாரியாக நடத் துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் போராட்டத்தை தீவிரப்படுத்த கூடிப் பேசுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.  இதில் விசைத்தறி உரிமையா ளர்கள் சங்கத்தின் சார்பில் அவிநாசி  சங்கத் தலைவர் என்.எம்.முத்துசாமி, மங்கலம் பகுதி தலைவர் ஏ.பி.வேலுச் சாமி, செயலாளர் எம்.பழனிச்சாமி, துணைத் தலைவர் ஆர்,கோபால், கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.பழனிச் சாமி, பி.வெங்கடாசலம், தெக்கலூர்  பொன்னுசாமி மற்றும் தொழிற்சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் சிஐடியு  திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் பி. முத்துசாமி, மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, எல்பிஎப் செயலாளர் சிவ சாமி, ஆர்.ரங்கசாமி, சரவணன் (மின் சாரம்) மகேஸ், ஐஎன்டியூசி நிர்வாகி எம்.நடராஜ், சபா துரை, ஏடிபி சார்பில் எஸ்.சுப்பிரமணியம், எம்எல்எப் சார் பில் பாண்டியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.