திருப்பூர், மே 25– நூல் விலை உயர்வுக்கு எதிராக 15 நாட் கள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறி வித்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்க ளின் போராட்டம் கண் துடைப்பு நடவடிக் கையா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப் பாக சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உற்பத்தியை நிறுத்தி இருக்கும் நிலையில் பெரிய ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு, நூல் கொடுத்து தொடர்ந்து விசைத்தறிகளை இயங்கச் செய்து வருகின்றனர். இது பற்றிய விபரம் வருமாறு: கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியா ளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் மங்கலத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் நூல் விலை உயர்வு குறித்தும், அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் திருப்பூர், பல்லடம், சோமனூர், அவி னாசி, மங்கலம், தெக்கலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தி யாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நூல் விலை உயர்வை கண்டித்தும், அதனை கட் டுப்படுத்த கோரியும் மே 22ஆம் தேதி ஞாயிற் றுக்கிழமை முதல் 15 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்தனர்.
உண்மை நிலவரம்
எனினும் போராட்டம் தொடங்கிய முதல் நாளான ஞாயிற்றுக்கிழமையே பெரும்பாலான பகுதிகளில் விசைத்தறிகள் தொடர்ந்து இயக்கப்பட்டன. சில பகுதி களில் மட்டுமே விசைத்தறி இயக்கம் முடங்கியது. 2 லட்சம் விசைத்தறிகள் இயங்காததால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்ட தாக செய்தி ஊடகங்களில் வெளியிடப் பட்டாலும், உண்மையில் சரி பாதி விசைத்த றிகள் நிறுத்தப்படாமல் இயக்கப்பட்டது. இதைப் பற்றி ஜவுளி உற்பத்தியாளர் தரப் பில் கேட்டபோது, ஏற்கெனவே விசைத்தறி உரிமையாளர்களுக்கு பாவு, நூல் கொடுத்து தேவையான அளவு துணி உற் பத்தி செய்த பின்னர்தான் உற்பத்தி நிறுத் தம் என்ற அறிவிப்பு செய்யப்பட்டது. குறிப் பாக பெரிய அளவுக்கு வர்த்தகம் செய்யக் கூடிய விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் கள், நூற்பாலைகள் சொந்தமாக வைத்தி ருக்கக் கூடிய ஜவுளி உற்பத்தியாளர்கள் என இந்த தொழிலில் பிரதான இடத்தை வகிக்கக்கூடிய பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்ற னர். அதேசமயம் சிறு அளவிலான உற்பத்தி யாளர்கள், உண்மையிலேயே நூல் விலை உயர்வினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள்தான் தறியாளர்களுக்கு பாவு, நூல் தர முடியாத நிலையில் உற்பத்தியை நிறுத்தி உள்ளனர் என்று தெரிவித்தனர்.
சுயநல நோக்கம்
மங்கலம், தெக்கலூர், அவிநாசி, சோம னூர், பல்லடம் என அனைத்து முக்கிய விசைத்தறி மையங்களிலும் விசைத்தறியா ளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களி டம் இது பற்றி விசாரித்தபோது பரவலாக விசைத்தறிகள் இயங்கிக் கொண்டிருப் பதை ஒப்புக் கொண்டனர். பெரிய ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்கள் சுயநல நோக் கில் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டி னர். குறிப்பாக, விசைத்தறியாளர்கள் நெச வுக் கூலி உயர்வு கேட்டபோது, ஜவுளி உற் பத்தியாளர்கள் தங்களுக்கு சங்கமே இல்லை என்று வாதிட்டனர். ஆனால் இப் போது சங்கமாக செயல்படுவது போல உற்பத்தி நிறுத்த அறிவிப்பு செய்கின்ற னர். தங்கள் தேவைக்கு ஏற்ப அவர்கள் பேசு கின்றனர் என்று விசைத்தறியாளர்கள் கூறி னர். விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்க ளைப் பொருத்தவரை எப்போதும், பொது நோக்கத்துடன் செயல்படுபவர்கள் கிடை யாது. பொதுவாக ஜவுளி சந்தை தேக்கம் அடைந்துள்ளது. இதனால் அவர்கள் தயா ரித்து வைத்திருக்கும் துணிகள் விற்பனை ஆகாத நிலை ஏற்பட்டுள்ளது. எப்போதெல் லாம் சந்தையில் விற்பனை நடைபெறவில் லையோ, துணிகள் தேங்கியிருக்கிறதோ அப்போதெல்லாம் ஜவுளி உற்பத்தியா ளர்கள் தன்னிச்சையாக உற்பத்தி நிறுத்தம் என அறிவிப்பார்கள். அதுபோலத்தான் இப் போதும் உற்பத்தியை நிறுத்துகின்றனர்.
என்ன செய்திருக்கலாம்
நூல் விலை அனைத்து தரப்பினரை யும் பாதிப்பது உண்மைதான். ஆனால் இவர்கள் அனைத்து ஜவுளி உற்பத்தியாளர் களுடன் கலந்து பேசி, விசைத்தறி உரிமை யாளர் சங்கங்கள், விசைத்தறி தொழிலாளர் சங்கங்கள் ஆகியவற்றுடனும் கலந்தாலோ சனை செய்து கூட்டாக முடிவு செய்து இந்த போராட்டத்தை அறிவித்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்த போராட்டம் முழு வீச்சில் நடைபெறும். ஆனால் இப் போது அவர்கள் அறிவித்த போராட்டம் என் பது சுயநல நோக்கில் பெரிய உற்பத்தியா ளர்கள் தப்பித்துக் கொள்ளும் நோக்கத்து டன் சின்ன ஜவுளி உற்பத்தியாளர்களை நெருக்கடிக்குள் தள்ளுவதாக உள்ளது என்றும் விசைத்தறி ஜவுளி தொழிலில் ஈடுபட் டுள்ள பலரும் கூறுகின்றனர். எனவே இந்த போராட்டமே கண் துடைப்பா? என்ற கேள்வி எழுந்துள்ளது. (ந.நி.)
\