ஜூலை 24 இல் ஜவுளி தொழில் முனைவோர் கூட்டம்
தருமபுரி, ஜூலை 20- தருமபுரியில் ஜூலை 24 ஆம் தேதி மாவட்ட அளவி லான ஜவுளி தொழில்முனைவோர் விழிப்புணர்வு, ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 24 ஆம் தேதியன்று பிற்பகல் 4 மணியளவில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், தரும புரி மாவட்ட ஜவுளி தொழில்முனைவோர்களுடன் நடை பெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்க ளில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப் பதை ஊக்குவிக்கும் வகையிலும், உள்கட்டமைப்பு வச திகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்க ளுக்கு ரூ. 2 கோடியே 50 லட்சம் வரை தமிழக அரசு நிதி வழங்குகிறது. பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருள்கள் மையம், குழந்தை கள் காப்பகம், உணவகம், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள், இயந்திரங்கள், தளவாடங்கள் ஆகிய அனைத்து வசதிகளும் இருந்தால் அரசின் மானி யம் பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும். இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் மண்டல துணை இயக்குநர், துணிநூல் துறை, சேலம் அலுவலகத்தை அணுகலாம். மேலும், 0427- 2913006 என்ற தொலை பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
இருசக்கர வாகனங்கள் பறிமுதல் நாமக்கல், ஜூலை 20- திருச்செங்கோடு அருகே உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 5 இருசக்கர வாகனங்களை போக்கு வரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள பெரியமணலி பகுதியில் 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பொதுச்சாலை யில் வாகனங்கள் இயக்கப்படுவது குறித்து, திருச்செங் கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், மோட்டார் வாகன ஆய்வாளர் பாமா பிரியா மற்றும் எலச்சிபாளையம் காவல் துறையினர் வெள்ளியன்று சிறப்பு கூட்டு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாக னங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கி, 5 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, எலச்சிபாளை யம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. மேலும் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி போன்றவை ஏற்றிச்செல் லும் வாகனங்களில் அதிக எடை, தார்ப்பாய் போர்த்தப் படாதது போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டு 5 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப் பட்டன. இந்த வாகன தணிகையின் மூலம் ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
ரூ.100ஐத்தாண்டியது தக்காளி விலை
உதகை, ஜூலை 20- தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், உதகையில் தக்காளி ஒரு கிலோ ரூ.100 தாண்டியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைகிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மேரக் காய் உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் கேரளா, கர்நா டகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக் காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல் சமவெளிப் பகுதிகளில் விளை யும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக் காய், வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாக னங்களில் உழவர் சந்தை மற்றும் மார்க் கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு விற் பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தென் மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் விளைநிலங்க ளில் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மழை காரணமாக விளைச்சலும் பாதிக்கப்பட்டது. இதனால் ஊட்டிக்கு தக்காளி வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக தக் காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகி றது. ஊட்டி உழவர் சந்தையில் வெள்ளியன்று நாட்டு தக்காளி கிலோ ரூ.65-க்கும், உதகை மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.85 முதல் விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விற் பனை கடைகளில் கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. சமைய லில் தக்காளி தவிர்க்க முடியாத பொருளாக இருப்பதால் இந்த விலை உயர்வு பொதுமக்க ளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்திற்கு தினசரி 4000 கிலோ தக்காளியும், ஊட்டிக்கு தினமும் 2,000 கிலோ தக்காளியும் விற்பனைக்காக கொண்டு வரப் படுகிறது. தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது. தென் மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்தால், விலை குறைய வாய்ப்பு இல்லை. இதனால் தக்காளி விலை மேலும் அதிகரிக்கலாம். மேட்டுப்பாளையத்தில் தக்காளி விலை அதி கமாக இருப்பதால், தற்போது மைசூரில் இருந்து மட்டுமே தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. இரண்டு மாதமாக இந்த விலை உயர்வு நீடிக்கிறது என்றனர். இதேபோல் கத்தரிக்காய் கிலோ ரூ.50க் கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.44க்கும் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட் டது. இதே போல் தொடர் மழையால் கேரட் உருளைக்கிழங்கு போன்ற மழை காய்கறிக ளும் வரத்து குறைந்து விலை அதிகரித்துள் ளது.
வனப்பகுதியில் விடப்பட்ட பூங்கா மான்கள்
வனப்பகுதியில் விடப்பட்ட பூங்கா மான்கள் கோவை, ஜூலை 20- கோவை வஉசி வன உயிரியல் பூங்காவில் இருந்த ஐந்து மான்களை வனப்பகுதியில் விடுவித்தனர். கோவை மாவட்டம், வஉசி வன உயிரியல் பூங்காவிற்கு உயிரியல் பூங்கா அந்தஸ்து இந்திய அரசால் மறுக்கப்பட் டது. இதனைத்தொடர்ந்து பூங்காவில் பராமரிக்கப்பட்ட விலங்குகளை வனப்பகுதியில் விடும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் கோவை மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் சனி யன்று ஐந்து கட மான்களை பிரத்தியேக கூண்டு வாக னத்தில் ஏற்றி சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சரகம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
மாணவன் மீது வேன் ஏறி விபத்து
மாணவன் மீது வேன் ஏறி விபத்து கோவை, ஜூலை 20- பள்ளி மாணவன் மீது வேன் ஏறி விபத்து ஏற்பட்டது, மாணவனை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவம னைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்த சண்மு கத்தின் இரண்டு மகன்கள் சிங்காநல்லூர் பகுதியில் அமைந்து உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். 1 ஆம் வகுப்பு படிக்கக் கூடிய (வெங்கடலட்சுமி) சிறுவன் பள்ளி முந்ததும் வீட்டிற்கு வேனில் வந்து உள்ளார். பின்பு வேனில் இருந்து இறங்குவதற்கு முன்பு ஓட்டுநர் வேனை இயக்கிவிட்டார். இதில், சிறுவன் ஓடும் வேனில் இருந்து இறங்கியதால் மாண வனுக்கு விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டவுடன் அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக சிறுவனை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். சம்பவம் தொடர்பாக காட்டூர் போக்கு வரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நடைபெற்றது முதற்கட்ட விசா ரணையில் தெரியவந்து உள்ளது. இதைத்தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
விவசாயிகளை ஏமாற்றும் காய்கறி கமிஷன் கடைகள்
விவசாயிகளை ஏமாற்றும் காய்கறி கமிஷன் கடைகள் உடுமலை, ஜூலை 20- உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் விளைப் பொருள்களை வாங்கும் கமிஷன் கடை உரிமையாளர்கள் நியாயம் இல்லாத வகையில் விலை நிர்ணயம் செய்வ தாக, விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை யில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசா யிகள் கூறியதாவது, விளைப் பொருட்களை மொத்த விற்பனை சந்தையில் விற்பனை செய்கின்றோம். விளைப் பொருட் களை வாங்கும் கமிஷன் கடை உரிமையாளர்கள் நியாயம் இல்லாத வகையில் விலை நிர்ணயம் செய்கிறார்கள். மேலும், பொது மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் காய்களின் முழு அறுவடை காலம் முடியும் முன்பே அறுவடை செய்ய கட் டாயப்படுத்துகின்றனர். பல நாட்களுக்கு காய்களை கெட்டு போகாமல் இருக்க இப்படி கூறுகின்றனர். இப்படி முழுமை யான விளைச்சல் இல்லாத காய்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும், ஆனால் இதனை வாங்கி பயன்படுத் தும் பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும். எனவே வேளாண்துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கமிஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உடு மலை கொல்லம்பட்டறை அருகில் உள்ள வேளாண் துறைக்கு சொந்தமான இடத்தில் விவசாய விளைப் பொருட்களை விற்ப னை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோடங்கிபாளையத்திற்கு தனி கால்நடை மருத்துவர் நியமிக்க கோரிக்கை
கோடங்கிபாளையத்திற்கு தனி கால்நடை மருத்துவர் நியமிக்க கோரிக்கை திருப்பூர், ஜூலை 20 - கோடங்கிபாளையம் கிராமத்துக்கு தனியாக கால்நடை மருத்துவர் நியமிக்க வேண்டும் என வேளான் வளர்ச்சி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். பல்லடம் வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் கோடங்கிபாளையம் ஊராட்சி இணைந்து அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த ஆலோச னைக்கூட்டம் காரணம்பேட்டையில் வெள்ளியன்று நடை ெபற்றது. ஊராட்சித் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், விவசாயிகள் பேசுகையில், கால் நடைத்துறை சார்ந்த மாநிலத் திட்டங்கள் வருவது குறித்து தகவல் தெரிவதில்லை. கால்நடை மருத்துவர்கள் காலை 10 மணிக்கு வந்துவிட்டு 11 மணிக்கு வெளியே சென்று விடுகின்றனர். பல பகுதிகளில் இருந்து மாட்டு கன்று களுடன் வரும் விவசாயிகள் மருத்துவர்கள் இல்லாததால், கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்காமலே திரும்ப அழைத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே கோடங்கிபாளை யம் கிராமத்துக்கு தனியாக கால்நடை மருத்துவர் நியமிக்க வேண்டும் என ஒவ்வொரு கூட்டத்திலும் வலியுறுத்தி வருகி றோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேலும், நாய் தொந்தரவுகளால் கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படுகி றது. மயில், பன்றி போன்றவற்றால் விளைநிலங்கள் கடுமை யாக பாதிக்கப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பின் பேசிய அதிகாரிகள், இது குறித்த புகார்களை விவசாயிகள் குறை தீர்க்கூட்டத்தில் கூறும்படி அறிவுறுத்தினர். இந்த கூட்டத்தில் வேளாண், கால்நடை, வருவாய்த் துறை, பட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மூலிகை தோட்டத்தில் காய்கறிகள் அறுவடை
மூலிகை தோட்டத்தில் காய்கறிகள் அறுவடை திருப்பூர், ஜூலை 20- உடுமலை ஒன்றியம் லிங்கமாவூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை மூலிகை தோட்டத்தில் மாணவ மாணவிகள் காய்க றிகள் அறுவடை செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை மற்றும் திருப்பூர் மாவட்ட தேசிய பசுமை பணி சார்பில் உடுமலை ஒன்றியம் லிங்கமாவூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் இயற்கை மூலிகை தோட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களுடன் இணைந்து 20க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகை செடிகள் நடவு செய்தனர். ஆசிரியர்கள் பழங்குடியின மாணவர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் முருங்கைக்காய், சுண்டைக்காய், அவ ரைக்காய், தர்பூசணி, கத்தரிக்காய், கீரைகள், பூச்செடிகள் என பல்வேறு செடிகளை நடவு செய்து உரமிட்டு காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வந்தனர். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால், மூலிகை செடிகள் மற்றும் காய்கள் காய்கறி செடிகள் நன்கு வளர்ந்து காய்க்க தொடங்கியுள்ளன. தற்போது இதை மாணவ, மாண விகள் ஆர்வமுடன் அறுவடை செய்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்தாருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இழப்பீடு வழங்க வேண்டும்
திருப்பூர், ஜூலை 20- திருப்பூரில் மின்சாரம் தாக்கி உயிரி ழந்த சிறுவன் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய தொழிற்சங்க மையம் கோரியுள்ளது. சிஐடியு திருப்பூர் மாவட்டக்குழு கூட் டம் அவிநாசி சாலை, தியாகி பழனிச் சாமி நிலையத்தில் வெள்ளியன்று மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி தலைமை யில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கே.சி. கோபி குமார், மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு: திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில், தெரு விளக்கு மின் கம்பத்தில் மின் கசிவு ஏற் பட்ட நிலையில், அதன் அருகே குடியி ருந்த பாத்திர தொழிலாளி மணிகண் டன் என்பவரது மகன் சுதீஷ், தற்செய லாக மின்கம்பத்தை தொட்ட நிலை யில், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயி ரிழந்தார். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சுதீஷ் உயிரிழந்தது, மின் சார வாரியத்தின் அலட்சியத்தின் விளை வாக நடந்த துயரச் சம்பவம் ஆகும். எனவே உயிரிழந்த சிறுவன் சுதீஸை இழந்து வாடும் பாத்திர தொழிலாளி மணிகண்டன் குடும்பத்தாருக்கு தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உரிய இழப்பீடு வழங்க வேண் டும். மேலும் மின்கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டும் அதன் மீது உடனடியாக தலை யிட்டு நடவடிக்கை எடுக்காத சம்பந்தப் பட்ட மின்வாரிய அலுவலர்கள் மீது சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிஐடியு வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது. சிஐடியு திருப் பூர் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் இத்தகவலை தெரிவித்தார்.
தியாகி பூசாரி நினைவு தினம்
தியாகி பூசாரி நினைவு தினம் கோவை, ஜூலை 20- பஞ்சாலை முதலாளிகள் ஏவிய குண்டர்களால் படு கொலை செய்யப்பட்ட தியாகி பூசாரியின் 67 ஆம் ஆண்டு நினைவு தினம் கூட்டம் செல்வபுரத்தில் நடைபெற்றது. பஞ்சாலை தொழிலாளியாகவும், தொழிலாளர்களின் உரி மைக்கான போராட்டத்தை முன்னெடுத்தவர் தோழர் பூசாரி. இவர் 1955 ஆம் ஆண்டு பஞ்சாலை முதலாளிகளின் சூழ்ச்சி யால் கொல்லப்பட்டார். இவருடைய நினைவு தினத்தை மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு இனைந்து நினைவு தினத்தை கடைபிடித்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக தியாகி பூசாரி அவர்களின் 67 ஆவது நினைவு அஞ்சலி சனி யன்று கோவை செல்வாபுரத்தில் உள்ள தியாகி பூசாரி நினைவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு நகரக்குழு உறுப்பினர் சபரிதாஸ் தலைமை ஏற்றார். நகரக்குழு செயலாளர் பி.சி.முருகன் கட்சி கொடியை ஏற்றினார். இதனைத்தொடர்ந்து தியாகி பூசாரியை நினைவு கூர்ந்து, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உரை யாற்றினார். இதில், சிபிஎம் பேரூர் நகரக்குழு செயலாளர் என். ராமமூர்த்தி, சிஐடியு தங்க நகை தொழிலாளர் சங்கத் தலை வர் கண்ணன், கோவை மாவட்ட பொதுத்தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டி.வி.ரமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
ஆழியாறு அணையில் இருந்து நீர் திறப்பு
ஆழியாறு அணையில் இருந்து நீர் திறப்பு பொள்ளாச்சி, ஜூலை 20- ஆழியாறு அணையில் இருந்து நீர் வெளியேறுவதால், கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு பொதுப்ணித்துறை சார்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள் ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மொத்த கொள்ளளவு 120 அடியாக உள்ளது. இந்நி லையில், தற்பொழுது பெய்த மழையால் கிடுகிடுவென 110 அடியை எட்டி உள்ளது. இதனால் அணையிலிருந்து தண்ணீர் எப்பொழுது வேண்டுமானாலும் ஆற்றில் வெளியேற்றப்படும் என்பதால் ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் துணி துவைக்கவும் ஆற்றில் குளிப்பதற்காகவும் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி சேவைகளை அறிய ‘செயலி’
மாநகராட்சி சேவைகளை அறிய ‘செயலி’ ஈரோடு, ஜூலை 20- ஈரோடு மாநகராட்சியின் சேவைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், செல்போன் செயலி அறிமுகப் படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வரு கின்றனர். ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் சுமார் 5 லட்சத்துக் கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில், நகரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் வகையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநகராட்சி குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் அதன் சேவைகளை மக்கள் தெரிந்து கொண்டு பயன்படுத்தும் வகை யில், செல்போன் செயலி அறிமுகப்படுத்துவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அடுத்த வாரம் செல்போன் செயலியை அறிமுகப்படுத்தப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலமாக மாநகராட்சியின் விவரங்களை தெரிந்து கொள்ளவும் பொதுமக்களுக்கு பய னுள்ளதாக இருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த முயற்சி!
மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த முயற்சி! ஈரோடு, ஜூலை 20- மத ரீதியாக தமிழக மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஈரோடு கிழக்கு மாவட்டக்குழு சார்பில் வெள்ளியன்று, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில், பாஜக தக வல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ’அன்புடன் அன்பு வேல்’ என்பவரும், ‘குன்னத்தூர் முதல்வர்’ எனும் முகநூல் பெயரில் செயல்பட்டு வரும் பாஜக ஊடகத்துறை செயலாளர் நந்தகுமார் என்பவரும். நபிகள் நாயகம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து முகநூலில் அவதூறான, ஆபாச மான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இது இஸ்லாமிய மக்களிடையே கடும் மன கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காக மக்களை பிளவுபடுத்தி, மத மோதல்களை யும், பதட்டத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல் பட்டு வரும் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.