districts

img

அங்கன்வாடி கட்டிடத்தில் ஆடு, மாடுகள் கட்டிவைப்பு

சேலம், செப்.29- சேலத்தில் அரசு அங்கன்வாடி கட்டிடத்தில் ஆடு, மாடுகளை கட்டி வைப்பதும், துணிகளை காய வைப் பது போன்ற செயல்களில் ஈடுபடு பவர் மீது நடவடிக்கை எடுக்காத அதி காரிகளால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சேலம் மாநகரம், 18 ஆவது கோட் டம், காசக்காரனூரில் காளியம்மன் கோவில் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த கட்டிடத்தில் தனிநபர் ஒருவர் துணிகளை காய வைப்ப தும், ஆடு, மாடுகளை கட்டுவது என பயன்படுத்தி வருகிறார். இதனால் சுகாதார சீர்கேடு நிலவுவதால் குழந் தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இத னையடுத்து அப்பகுதி மக்கள் அரு கில் உள்ள சூரமங்கலம் காவல் நிலை யத்தில் அங்கன்வாடி கட்டிடத்தில் ஆடு, மாடுகளை கட்டுவது குறித்து புகார் அளித்தனர். ஆனால், இந்த புகாரின் மீது போலீசார் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இந் நிலையில், அங்கன்வாடி மைய கட்டி டத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிர மித்து பயன்படுத்துவதால் அங்கு  சுகாதார சீர்கேடு இருந்து வருவதாக வும், இளம் குழந்தைகள் அங்கன் வாடி மைய கட்டிடத்தில் இருப்ப தால் அவர்களுக்கு பாதிப்புகள் ஏற் பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, இப்பிரச்சனையில் அரசு உரிய தலையீடு செய்து, சுகாதாரம் இல்லாமல் இருக்கும் அங்கன்வாடி கட்டிடத்தை பராமரிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர்.