திருப்பூர், பிப்.6- திருப்பூர் மாவட்டம் குன்னத் தூர் அருகே கருமந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பெண் மருத்துவர்கள் இல்லாமல் ஆண் மருத்துவர் மாணவிகளைத் தொட்டுப் பரிசோதனை செய்த தாக பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரி வித்தனர். கருமந்துறை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் சார் பில் இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கு சனியன்று புகார் கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. இந்த கடிதத்தில் கூறப்ப டிருப்பதாவது: ஆர்பிஎஸ்கே திட் டம் மூலம் பள்ளிக் குழந்தைக ளுக்கு குறிப்பிட்ட கால இடைவெ ளியில் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி மருத்துவர் புரூஸ், மருந்தாளுநர் லாவண்யா ஆகியோர் மூலம் கருமந்துறை பள்ளி குழந்தைக ளுக்கு பரிசோதனை நடந்தது. அப் போது தலை முதல் கால் வரை பரி சோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக பெற்றோ ருக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி யும், பெண் மருத்துவர் இல்லாத போதும் பள்ளி ஆசிரியர்கள் அரு கில் இல்லாத நிலையில் இப்பரி சோதனை செய்யப்பட்டது.
பெண் குழந்தைகளின் அந்தரங்க பகு தியை பார்வையிட்டு சோதனை செய்தது பெற்றோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பள்ளிக்கு வர குழந்தை கள் அச்சப்படுகின்றனர். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விசார ணையின் தன்மையை பெற்றோ ருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து கருமந்துறை பள்ளிக்கு வந்த குன் னத்தூர் காவல் துறையினர் பெற் றோரிடம் சமாதானம் செய்து வைத்தனர். அதேசமயம் சுகாதா ரப் பணிகள் திருப்பூர் மாவட்ட துணை இயக்குநர் இந்த புகாரில் உண்மைத்தன்மை இல்லை என்று தெரிவித்துள்ளார். குன்னத் தூர் காவல் நிலையத்தில் எந்த புகாரும் பெறப்படவில்லை என் றும் காவல் துறையினர் கூறியுள்ள னர். ஆர்பிஎஸ்கே திட்டம் என்பது ஒன்றிய அரசு மூலம் நடைமுறைப் படுத்தும் திட்டமாகும். பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு பிறப்புக் குறைபாடு, ஊட்டச் சத்து பற்றாக் குறை, வளர்ச்சி குறைபாடு ஆகிய வற்றை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் திட்ட மாகும். இதன் மூலம் பள்ளி குழந் தைகளின் வளர்ச்சியை பரிசோ தனை செய்து தேவையான மருத் துவ உதவிகள் வழங்கப்படும் என் பது குறிப்பிடத்தக்கது.