கோவில் நகை திருட்டு: போலீசார் விசாரணை
கோவை, ஜன.14- அன்னூர் அருகே கோவிலின் நகை திருடு போனது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள செல்ல னூரில் மகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவி லில் தங்கராசு என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வரு கிறார். இந்நிலையில், நள்ளிரவில் இக்கோவிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், சாமி சிலையிலிருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதற்கிடையே கோவிலை திறக்க வந்த பூசாரி, நகை கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி யடைந்து, அன்னூர் காவல் துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆய்வு மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை பாதுகாப்பு வார விழா:
தாராபுரம், ஜன.14- தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, போக்குவரத்து காவல் துறை சார்பில் காவல் துணை கண்கானிப்பாளர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று கள் நடும் விழா சனியன்று நடைபெற்றது. சார்பு நீதிபதி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தாராபுரம் காவல் துணை கண்கானிப்பாளர் தனராசு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தாராபுரம் வட்ட சட்ட குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சார்பு நீதிபதி எம்.தர்மபிரபு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு போக்குவரத்து காவலர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையில் அமையும் என கூறினார். விழாவில் குற்றவியல் நடுவர் நீதிபதி எஸ்.பாபு, வழக்கறிஞர் சங்க தலைவர் கலை செழியன், செயலாளர் ராஜேந்திரன், துணைச்செயலாளர் வாரணவாசை, அரசு வழக்கறிஞர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.
எம்.ஆர்.பி. செவிலியர்கள் பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட கோரிக்கை
சென்னை, ஜன. 14- எம்.ஆர்.பி. செவிலியர்கள் பணி நியமன பிரச்சனையில் முதலமைச் சர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என எம்.ஆர்.பி. செவிலி யர்கள் மேம்பாட்டு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பொதுச்செய லாளர் நே.சுபின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட வேண்டிய 3,200 காலி பணியிடங்கள் இருந்தும் அமைச் சர் அந்தப் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் மதிப் பெண் மற்றும் இட ஒதுக்கீடு பின்பற் றப்படாத 11 மாத தற்காலிக பணியி டங்களில் பணி அமர்த்துவதாக தெரி வித்திருந்தார். மருத்துவ பணியாளர் தேர்வு வாரி யம் மூலம் பணி அமர்த்தப்பட வேண் டிய பணியிடங்கள் தற்போது மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் பணி அமர்த்த விண்ணப்பங்கள் கேட்கப் பட்டுள்ளன. இந்நிலையில், செவிலியர் களை பணி நிரந்தரம் செய்வதற்கு பதி லாக அவர்களை முறையற்ற, மதிப் பெண் மற்றும் இட ஒதுக்கீடு பின்பற் றப்படாத சமூக நீதிக்கு எதிரான தற்கா லிக பணியிடங்களாக மாற்றி அதில் அவர்களை பணியமர்த்த அரசே முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடி யாது. பெண்கள் உரிமை மற்றும் சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் திமுக ஆட்சியில் இதுபோன்ற செயல்கள் அரசின் நற்பெயரை கெடுக்கும் வித மாக அமையும் என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தலையிட்டு உண்மை நிலை அறிந்து எந்த செவி லியரும் பாதிக்கப்படாத விதத்தில் முறையான பணி அமர்வு செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு புகைப்படக் கண்காட்சி:
திருப்பூர், ஜன.14- திருப்பூர் மாநகராட்சி முத்தமிழறிஞர் கலைஞர் பேருந்து நிலையத்தில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளைத் செய்தித்துறை அமைச்சர் சனியன்று துவக்கி வைத்தார்.
காட்டு யானைகள் முகாம்
உதகை, ஜன. 14- சமவெளி பகுதிகளிலிருந்து குட்டியுடன் 9 காட்டுயானைகள் குன்னூரில் கடந்த 30 நாட்க ளாக முகாமிட்டுள்ளது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களிலும், இரவில் தோட்ட தொழிலாளர்கள்குடியிருப்பிலும் முகாமிட்டிருந்தன. இந்த யானைகளை விரட்டும் முயற்சி யில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மீண்டும் காட்டுயானைகள் அங்கு வராமலி ருக்க கண்கானிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இடுவாயில் சமத்துவ பொங்கல்
திருப்பூர், ஜன.14 - திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சி மன்ற அலுவல கத்தில் சமத்துவ பொங்கல் வைத்து சர்க்கரைப் பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன், துணைத் தலைவர் எஸ் பரமசிவம், நிலவள வங்கி இயக் குனர் கே.ஈஸ்வரன், ஆண்டிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி இயக்குனர் இந்திராணி பழனிசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பரமேஸ்வரி சண்முகம், மணி, பி. ஈஸ்வரி மற்றும் அனைத்து ஊராட்சி பணியாளர்களும் கலந்து கொண்டனர். அனைத்து ஊராட்சி பணியாளர்களுக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கி சீருடைகளும் வழங்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களால் பணித்தளத்தில் (ஆட்டையம்பாளையம் மற்றும் சின்ன காளிபாளையம் பகுதி களில்) சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு விளை யாட்டுக்கள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இந்திய தாய் திருநாட்டில் சமூக சமத்துவ நிலையை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம் என இனிய நாளான தமிழர் திருநாள் பொங்கல் திருநாள் திருவள்ளுவர் தின நன்னாளில் உறுதிமொழி ஏற்றனர்.
சமூக நல்லிணக்க மேடை சார்பில் சமத்துவ பொங்கல் விழா
தருமபுரி, ஜன.14- தருமபுரி சமூக சேவை மையத்தில் சமூக நல்லிணக்க மேடை, சமூக சேவைச் சங்கம் சார்பில் சமத்துவப் பொங் கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சமூக நல்லிணக்க மேடை பொறுப் பாளர் இரா.சிசுபாலன் தலைமை வகித்தார். திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங் கம் பெ.சுப்பிரமணியம், நகர செயலாளர் நாட்டான் மாது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ. குமார், நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு, சமூகசேவை மைய இயக்குநர் அருட்தந்தை ஜோசுதாஸ், சிறுபான்மை நலக்குழு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.கிரைஸாமேரி, இஸ்லாமிய கூட் டமைப்பு மாவட்ட தலைவர் சுபேதார், நிர்வாகிகள் சிக்கந் தர், சுராஜூதின், காதர் பாட்சா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஜெயா, நகர செய லாளர் நிர்மலா ராணி, நிர்வாகி ரங்கநாயகி ஆகியோர் சமத் துவ விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
எம்.ஆர்.பி. செவிலியர்கள் பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட கோரிக்கை
சென்னை, ஜன. 14- எம்.ஆர்.பி. செவிலியர்கள் பணி நிய மன பிரச்சனையில் முதலமைச்சர் நேர டியாக தலையிட்டு தீர்வு காண வேண் டும் என எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம் பாட்டு சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது. இதுகுறித்து பொதுச்செயலாளர் நே.சுபின் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது. மருத்துவ பணி யாளர் தேர்வு வாரியம் மூலம் இட ஒதுக் கீடு அடிப்படையில் நிரப்பப்பட வேண் டிய 3,200 காலி பணியிடங்கள் இருந்தும் அமைச்சர் அந்தப் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் மதிப் பெண் மற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றப் படாத 11 மாத தற்காலிக பணியிடங்க ளில் பணி அமர்த்துவதாக தெரிவித் திருந்தார். மருத்துவ பணியாளர் தேர்வு வாரி யம் மூலம் பணி அமர்த்தப்பட வேண்டிய பணியிடங்கள் தற்போது மாவட்ட சுகா தார சங்கங்கள் மூலம் பணி அமர்த்த விண்ணப்பங்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு பதிலாக அவர்களை முறையற்ற, மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாத சமூக நீதிக்கு எதிரான தற்காலிக பணி யிடங்களாக மாற்றி அதில் அவர்களை பணியமர்த்த அரசே முயற்சிப்பது ஏற் றுக்கொள்ள முடியாது. பெண்கள் உரிமை மற்றும் சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் திமுக ஆட் சியில் இதுபோன்ற செயல்கள் அர சின் நற்பெயரை கெடுக்கும் விதமாக அமையும் என்பதால் தமிழ்நாடு முதல மைச்சர் இதில் தலையிட்டு உண்மை நிலை அறிந்து எந்த செவிலியரும் பாதிக்கப்படாத விதத்தில் முறையான பணி அமர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதிமுக சார்பில் 5 ஆயிரம் பேர் பொங்கல் வைக்கும் விழா
திருப்பூர், ஜன. 14 - திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் மறுமலர்ச்சி திரா விட முன்னேற்ற கழகம், திலீபன் மன்றத்தின் சார்பில் தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திங்களன்று 5 ஆயிரம் பேர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெ றுகிறது. திங்கட்கிழமை காலை 8 மணி அளவில் சாமுண்டிபுரம் பகு தியில் இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மும்மதத்தினர் 5000 பேர் பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு பொங்கல் விழாவை துவக்கி வைக்க உள்ளார். மதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், 24 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஆர்.நாகராஜ் இத்தகவலை தெரிவித்தார்.
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி
சேலம்,ஜன14 - தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக் கக் கண்காட்சி புதிய பேருந்து நிலையம் கண் காட்சி திடலில் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் திறந்து வைத்தார். இதில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடை கோடி தமிழரின் கனவுகள் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட் டங்கள் குறித்த கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் ராஜேந்திரன் மேற்கு சட்டமன்ற உறுப்பி னர் அருள் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதா சிவம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் எஸ். கார்மேகம் மாநக ராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஜவுளி தேக்கம்: தொழிலாளர்கள் வேலை இழப்பு அபாயம்
பள்ளிபாளையம், ஜன.14- பள்ளிபாளையம் பகுதியில் ஜவுளி தேக் கத்தால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தில் சுமார் 30,000 மேற்பட்ட விசைத்த றிகள் இயங்கி வருகின்றது. இந்த விசைத்தறி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாக வும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் லுங்கி, துண்டு உள் ளிட்ட பல்வேறு வகையான ஜவுளி துணிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது, பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்களுக்கு, போதிய ஆர்டகள் வந்து சேரா ததால், உற்பத்தி செய்யப்பட்ட லுங்கி, துண்டு ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ளது. மேலும், தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு, விசைத்தறி கூடங்களில் அதிக அளவு துணிகள் நெசவு செய்யப்பட்டு விற் பனைக்கு தயாராக உள்ளது. ஆனால், பொங் கல் பண்டிகைக்கும், எதிர்பார்த்த ஆர்டர்கள் வராதால், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி கள் அனைத்தும் அப்படியே தேங்கியுள்ளது. இதன் காரணமாக விசைத்தறி கூடம் உரி மையாளர்கள் கலந்து ஆலோசனை செய்த அடிப்படையில், பொங்கல் பண்டிகையிலி ருந்து பத்து நாட்களுக்கு பள்ளிபாளையத் தில் உள்ள விசைத்தறிக்கூடங்களுக்கு விடு முறை அளிப்பதென முடிவெடுக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், இத்தொழில் நம்பி உள்ள விசைத்தறி கூலி தொழிலாளர்கள் வாழ்வா தார பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும், விசைத்தறி ஜவுளி ஏற்றுமதி குறைந்து, விசைத்தறி தொழில் பின்ன டைவை சந்தித்து வருகிறது என்பது குறிப்பி டத்தக்கது.