பொய்யை உண்மை போலப் பேசுவது, எதார்த்தமான சூழ்நிலையை பற்றி கவலைப்ப டாமல், கவனப்படுத்தாமல், பொய்யான பிம்பத் தைக் கட்டமைப்பது ஆகியவற்றில் பாஜகவி னரை மிஞ்ச ஆள் இல்லை. மக்களின் வாழ்க்கை பிரச்சனைகளில் கவனம் சென்றுவிடாமல், உணர்ச்சி வசப்படுத்தும் விசயங்களில் கவ னத்தை திசை திருப்புவதில் அவர்களை யாரும் மிஞ்ச முடியாது. செவ்வாய்க்கிழமை திருப்பூருக்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அப்ப டித்தான் வாயில் வடை சுட்டிருக்கிறார். பாஜக எப்படி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று எண்ணுகிறதாம்! பாஜக எம்.பி. இருந்திருந் தால் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதியை ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்த முயற்சி எடுத்திருப் பார்களாம்! பொய் சொல்ல காசா, பணமா? ஏற்கெனவே கடந்த 2014ஆம் ஆண்டு நாடா ளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருப்பூர் தொழில் துறையினர் மோடியை சந்தித்தனர். அப் போது திருப்பூர் ஏற்றுமதியை ரூ.1லட்சம் கோடி யாக உயர்த்துவோம், அதற்காக தொலை நோக்குத் திட்டத்துடன் செயல்படுவோம் என்றார்.
அதை கேட்டு உடல் சிலிர்த்து, கண்ணீர் கசிந்து உருகினர் திருப்பூர் தொழில் துறையி னர். இவரல்லவோ தலைவர். மற்றவர்கள் பத வியைப் பற்றி சிந்திக்கும்போது இவர் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் தலைவர் என் றெல்லாம் புகழ்ந்து தள்ளினர். ஆனால் இந்த எட்டாண்டு காலத்தில் திருப் பூர் தொழில் அடித்து நொறுக்கி சின்னாபின்னப் படுத்தப்பட்டு விட்டது என்றால் மிகையல்ல. ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு, ஜி எஸ்டி வரி விதிப்பு, பஞ்சு, நூல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் முதல் உதிரி பாகங்கள் வரை அனைத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்தி ருப்பது என அடிமேல் அடி விழுந்து இன்று திருப் பூர் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக் கிறது. வெளிநாட்டு வர்த்தகம், பஞ்சு, நூல் விலை கட்டுப்பாடு ஆகியவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் விசயங்கள் ஆகும். இங்கிருக்கும் தொழில் துறையினர் எத்தனை யோ முயற்சிகள், கோரிக்கைகள், போராட்டங் கள் நடத்தியும் கூட, இந்த தொழிலைக் காப்ப தற்கு மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 2020இல் ரூ.1லட்சம் கோடி வர்த்தகம் என்றார்கள். ஆனால் இருக்கும் தொழிலும் சீர்கு லைக்கப்பட்டு விட்டது.
இந்த லட்சணத்தில் செவ்வாய்க்கிழமை திருப்பூருக்கு வந்த அண்ணாமலை, கொஞ் சமும் மனசாட்சி இல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசியிருக்கிறார். மோடியாவது ரூ.1 லட்சம் கோடியாக உயர்த் துவேன் என்றார். ஆனால் இப்போது அண்ணாம லையோ ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தலாம் என்கிறார். வாயில் வடை சுடுவதில் அவரது எஜ மானர் மோடியை மிஞ்சுகிறார் அண்ணா மலை. மோடி ரூ.1 லட் சம் கோடி என்று சொல்லி 50 சதவி கிதத்திற்கும் மேற் பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்திவிட் டார். அப்படியா னால் அண்ணா மலை ரூ.5 லட் சம் கோடி என சொல்வதன் அர்த் தம் என்ன? இன்னும் கொஞ்ச, நஞ்சம் உயிர் பிடித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் தொழில்க ளுக்கும் மொத்தமாக சமாதி கட்டப் போகி றார்களா? உண்மையான அக்கறை இருக்குமா னால், குறைந்தபட்சம் திருப்பூர் தொழில் துறையி னரை நேரில் சந்தித்து தற்போதைய நெருக்கடி நிலைக்கு என்ன செய்யலாம் என்றாவது கேட்டி ருப்பார்கள். அக்கறை இருந்தால்தானே? துன்பத்தில் இருப்பவர்களைப் பார்த்து கேலி பேசும் கொடூர மனம் படைத்தவர்கள்தான் இப்ப டிப் பேச முடியும்! இந்த லட்சணத்தில் 2024 தேர்த லில் பாஜகவின் முதல் எம்.பி. திருப்பூரில் இருந்து வருவாராம்! திருப்பூர் மக்களே உஷார்... (வே.தூயவன்)