கோவை, ஜூலை 26- ஈஷா யோகா மையத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஈஷா நிர்வாகம் சார்பில் ஏன் புகார் அளிக்க வில்லை என்பதை விசாரிக்க வேண்டும் என இயற்கை வள பாதுகாப்பு கூட்டி யகத்தினர் கோவை மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். கோவை ஈஷா யோகா மையத்தில் ஜூலை 22 ஆம் தேதியன்று ஆந்திரா வைச் சேர்ந்த கொள்ளு ரமணா என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில், மீட்கப் பட்டார். இதுதொடர்பாக ஈஷா யோகா மையத்தை சேர்ந்தவர்கள் யாரும் புகார் அளிக்காத நிலையில், செம்மேடு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவள்ளி ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், ஈஷா யோகா மையத்தில் உள்ள கொன்றை பில்டிங் முதல் தளத்தில் ரமணா தூக் கிட்டு உயிரிழந்தார் என்றும், தான் அங்கு சென்ற பொழுது பிரேத விசார ணைக்காக அரசு மருத்துவமனைக்கு உடலை எடுத்துச் சென்று விட்டார்கள் எனவும், இது குறித்து விசாரித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார். இந்த புகார் அடிப் படையில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக் கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், தனியார் இடமான ஈஷா வளாகத்தில் உயிரிழந்த நபர் குறித்து புகார் கொடுத்திருக்க வேண் டும். ஈஷா மையத்தில் ஏன் யாரும் புகார் கொடுக்கவில்லை? என விசாரிக்க வேண் டும். மேலும், ரமணாவின் உடலை முத லில் பார்த்த நபர்கள் ஏன் காவல் துறை யிடம் புகார் கொடுக்கவில்லை என் பதை விசாரிக்க வேண்டும். ஆயிரக் கணக்கானோர் வேலை செய்யும் தனி யார் நிறுவனமான ஈஷா யோகா மையத் தின் நிர்வாகிகள் ஏன் தற்கொலை குறித்து புகார் கொடுக்கவில்லை. மேலும், இந்த தற்கொலைக்கும், ஈஷா யோகா மையத்திற்கும் தொடர்பில்லை என காட்டுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் மூலம் புகார் கொடுக்கப்பட் டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.