பொள்ளாச்சி, மே 18- தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சம்பளம் ரூ.425. 40ஐ வழங்கிடக்கோரி வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் (சிஐடியு) சங்கத்தின் சார் பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர் களுக்கு ஒரு நாள் சம்பளமாக தமிழக அரசு அறிவித்தபடி ரூ.425.40 ஐ உடனடியாக வழங்கிட வேண்டும். அரசு தேயிலைத் தோட் டங்களில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரியும் தேயிலைத் தோட்டத் தொழிலா ளர்களை நிரந்தரமாக்க வேண்டும். சீருடை கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும். பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்களையும், பணிக்கொடையும் காலந்தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி திங்க ளன்று வால்பாறை தேயிலைத்தோட் டத் தொழிலாளர்கள் (சிஐடியு) சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வால்பாறை சின்கோனா பகுதியிலுள்ள மாவட்ட தேயிலைத் தோட்டத் தொழிலா ளர்கள் சங்க அலுவலகத்தின் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற் றும் அலுவலர்கள் சங்கத்தின் (சிஐடியு) பொதுச்செயலாளர் பி.பரமசிவம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் மணிகண்டன், மாரிமுத்து மற்றும் நேதாஜி, முருகன், தில்லை, ரத்தினம், உள்ளிட்ட திரளானோர் கலந்துக்கொண்ட னர்.