சென்னை,மே 6-டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கையை தொடரக்கூடாது என இடைக்கால தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம் சட்டப் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்அளிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக் குறிச்சி பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவ தாகவும், அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கு மாறும் அரசுக் கொறடா ராஜேந்திரன், பேரவைத் தலைவரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், மூன்று எம்.எல்.ஏ.க்களும் ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் கடந்த 30ஆம் தேதிஉத்தரவிட்டார். இந்த நோட்டீசை எதிர்த்து, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 2 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிட் மனு தாக்கல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரபட்சமாக நடந்து வருவதாகவும், 22 சட்ட மன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் வரவுள்ள நிலையில், பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியிருப்பது பார பட்சமானது என்றும் மனுவில் கூறப் பட்டிருந்தது. பேரவைத் தலைவர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும்போதே, அவர் தங்களுக்கு எதிராகத் தகுதி நீக்கம் தொடர்பான உத்தரவை பிறப்பிக்கவாய்ப்புள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, தகுதி நீக்கம் தொடர்பாக விளக்கம் கேட்டுஅனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் தொடர்பாக பேரவைத் தலைவர் தனபால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது.இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா அமர்வு திங்களன்று(மே6) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 3 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், சபாநாயகர் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
தடையை நீக்குவோம்: அமைச்சர்
பேரவைத் தலைவரின் நட வடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தி யாளர்களிடம் கூறுகையில்,“ உச்சநீதி மன்றம் வழங்கி இருப்பது தீர்ப்பு அல்ல. இடைக்கால தடைதான். ஏற்கனவே பல வழக்குகளில் பல சந்தர்ப்பங்களில் தடை விதித்த வரலாறு உண்டு. 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க உரிய முகாந்திரத்தின் அடிப்படையிலேயே பேரவைத் தலைவர் 182 பக்கங்கள் கொண்ட விளக்கம் கேட்கும் நோட்டீசைஅனுப்பியிருக்கிறார். அவர்கள் தரப்பில் நீதிமன்றத்தை நாடியதால் இடைக்கால தடை வழங்கியிருக்கிறது. இனி நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும். உரிய விளக்கத்தை அளித்து இடைக்கால தடையை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
சூழ்ச்சி செய்யவில்லை: ரத்தினசபாபதி
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. கூறுகையில், “எங்களது கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை உத்தரவுபிறப்பித்துள்ளது. இதன் மூலம் தர்மம் வென்றுள்ளது. நீதி வென்றுள்ளது. எனவே பேரவைத் தலைவரை சந்திப்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம்” என்றார்.நாங்கள் அதிமுகவுக்கு எதி ராகவோ, இந்த ஆட்சிக்கு எதிராகவோ எந்தவித சூழ்ச்சியும் செய்யவில்லை. கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆதரவாக இருக்கிறோம். அதற்கு பரிசாகத் தான்எங்களை தகுதி நீக்கம் செய்ய முயற்சிசெய்துள்ளனர். ஆனால் இந்த ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட 11 பேரில் ஒருவருக்கு துணை முதலமைச்சர் மற்றும் பொறுப்புகளை வழங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.