கோவை, ஜூலை 6- டேக்சி ஓட்டுநர்கள் மீதான தாக்குதல் மற்றும் படுகொ லைகளை கண்டித்து கோவையில் புதனன்று டாக்சி ஓட்டுநர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையிலும், கோவையிலும் டேக்சி ஓட்டுநர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதில் டாக்சி ஓட்டு நர்கள் சிலர் பல்வேறு பகுதிகளில் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இதனையடுத்து டேக்சி ஓட்டுனர்களின் பாது காப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் ஏராளமான டேக்சி ஓட்டுநர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட டேக்சி ஓட்டுநர்கள் கூறுகையில், டேக்சியை திருடுவதற்காக ஓட்டுநர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகின்றனர். பெரிய நாயக்கன்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர் ஆகிய பகு திகளில் ஓட்டுநர்கள் மீது தாக்குதல் மற்றும் படுகொலை சம்ப வங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எனவே, ஓட்டுநர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். தற் போது அனைத்து செலவினங்களும் அதிகரித்துள்ள சூழலில், எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஜிபிஎஸ் கருவியை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும். திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டும் என வலியுறுத் தினர்.