districts

சமுதாயக்கூட கட்டுமான பணியில் தீண்டாமை மாவட்ட ஆட்சியர் தலையிட ததீஒமு வலியுறுத்தல்

ஈரோடு, ஜூலை 22- சாதிய, தீண்டாமை கண்ணோட்டத்துடன் அரசு  சமுதாயக்கூடம் அமைக்கும் பணியை ஆதிக்க சாதியினர் நிறுத்தி வைத்துள்ளதை தொடங்க வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியினர் திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் எம்.அண்ணாதுரை அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு மாவட்டம், சத்தி வட்டம், புதுப்பீர்கடவு,  பட்டரமங்களம் ஊராட்சி பகுதியில்  சுமார் 500க் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இப்பகுதியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பி னர் ஆ.ராசாவின் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து சமுதாயக் கூடம் அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக் கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து, கட்டுமான  பணி தொடங்கி நடைபெற்று வந்தது. அப்போது  அப்பகுதியில் குடியிருக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த நடராஜ், முத்து, பூங்கார் ஊராட்சித் தலைவர் காக்கி ராஜேந்திரன் ஆகியோர்  கும்பலாக வேலை நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தனர். இங்கெல்லாம் எதுக்குடா சமு தாயக்கூடம் எனக்கேட்டு கடுமையான மற்றும் இழி வான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினர். மேலும், அவர்களுடன் வந்தவர்கள், அஸ்திவாரம்  பறித்து கான்கிரீட் போடுவதற்காக நட்டு வைக்கப் பட்டு இருந்த கம்பிகள் எல்லாம் பிடுங்கி எறிந்தார் கள். அப்போது வேலையை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஒன்றியக் கவுன்சிலர் சங்கீதா, வீரன்,  பண்ணாரி ஆகியோர் எதுக்கு இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு ஜாதியை  சொல்லி வாய்க்கு வந்தபடி திட்டி உள்ளனர்.  இது குறித்த புகாரின் மீது பவானிசாகர் காவல்  நிலையத்தில் கடந்த 24ஆம் தேதி வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு வேலையை தடுத்து பொருட்களை எடுத்து சேதா ரம் செய்தும், நியாயம் கேட்ட பட்டியல் சமூக கவுன் சிலர் கவிதா மற்றும் வீரன், பண்ணாரி ஆகி யோரை சாதியை இழிவாக சொல்லி திட்டிய ராம சாமி மகன் நடராஜ், சங்கீதா கணவர் முத்து புங் கார் ஊராட்சித் தலைவர் காக்கி ராஜேந்திரன் ஆகி யோர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் கள் உடனடியாகக் கைது செய்யப்படவேண்டும். சமுதாயக்கூடம் கட்டினால் பட்டியல் சாதி மக்கள்  கலந்து கொள்வார்கள். அவ்வாறு கலந்து கொண் டால் தீட்டாகிவிடும் என சாதிய தீண்டாமை கண் ணோட்டத்துடன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, சமுதாயக்கூட  பணிகளை உடனடியாக துவங்கி முடிக்க வேண் டும். சாதிய பாகுபாடில்லாமல் அனைத்து மக்க ளும் சமுதாயக்கூடத்தை பயன்படுத்த வகை  செய்ய வேண்டும். சட்டப்படியான நடவடிக்கை  எடுத்து பட்டியலின மக்களின் அச்சத்தை போக்கி  அவர்களின் உரிமையை  நிலைநாட்ட தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.