districts

டாஸ்மாக் கடைகளுக்கு ரேசன்: மனமகிழ் மன்றங்களுக்கு தாரளாம்!

கோவை, அக்.29- குறைந்த விலையிலான மது வகைகளை டாஸ்மாக் மதுக்கடைக ளுக்கு ரேசன் முறையில் கொடுக் கும் டாஸ்மாக் நிர்வாகம், எப்எல்2 தனியார் கடைகளுக்கு தாராளமாக இவ்வகையான மதுவகைகளை  வழங்குவதாக டாஸ்மாக் ஊழியர் கள் குற்றம்சாட்டியுள்ளனர். டாஸ்மாக் ஊழியர்கள், கடந்த 21 ஆண்டுகளாக சட்ட சமூக பா துகாப்பற்ற நிலையில், அத்துக்  கூலிகளாக பணியாற்றி வருகின்ற னர். டாஸ்மாக் ஊழியர்களின் கால முறை ஊதியம் உள்ளிட்ட சட்டப் பூர்வமான கோரிக்கைகள் ஆட்சி யாளர்களின் இதயத்தை தொடு வதே இல்லை. 480 நாள் பணி  முடித்த டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரையும் பணி வரன்முறை  செய்திட வேண்டும். டாஸ்மாக் ஊழி யர்களின் ஓய்வு வயதை 58லிருந்து 60 ஆக உயர்த்திட வேண்டும். மது பாட்டில்கள் விற்பனையை முறைப் படுத்த வேண்டும். மதுவிலக்கு சட்ட விதிமுறை 1937-ஐ அமல்படுத்த வேண்டும் என சிஐடியு டாஸ்மாக்  ஊழியர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. ஊழியர்களின் கோரிக் கைகளுக்கு செவி சாய்க்க மன மில்லாத ஆட்சியாளர்கள், டாஸ் மாக் மதுக்கடைகளை படிப்படி யாக குறைப்போம் என்கிற உறுதி அளித்த ஆட்சியாளர்கள், தற் போது படிப்படியாக எப்எல்2 என்ற பெயரில் மனமகிழ் மன்றங்களை தனியார் நடத்த அனுமதித்து வருகின்றனர்.  டாஸ்மாக் நிறுவனத்தின் வரு மானத்தை எப்எல்-2 தனியார் மதுக் கடைகள் அள்ளி எடுத்துக்கொண்டி ருக்கிறது. முதலில் எப்எல்-2 கடை களின் விற்பனை நேரத்தை அதிக ரித்தது. தற்போது குறைந்த விலை யில், அதிகமாக விற்பனையாகும் மதுவகைகளை டாஸ்மாக் கடைக ளுக்கு கொடுப்பதில் கட்டுப்பாடு காட்டுகிறது. அதேநேரத்தில் இந்த  மனமகிழ் மன்றங்களுக்கு தாராள மாக விநியோகம் செய்கிறது என் கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் கோவை மாவட் டத் தலைவர் எஸ்.மூர்த்தி கூறுகை யில், டாஸ்மாக் ஊழியர்களின் நியா யமான கோரிக்கைகளை ஆட்சியா ளர்கள் நிறைவேற்ற மறுக்கிறார் கள். அதேநேரத்தில, தனியார் எப்எல்-2 மதுக்கடைகள் கொள்ளை லாபம் பார்ப்பதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். டாஸ்மாக் மதுக் கடைகளை நாடி வருபவர்கள், அன் றாடம் உழைத்து அதில் கிடைக்கும் ஒரு பகுதி வருவாயை, மது வகை களுக்கு செலவு செய்கிறார்கள். அவர்கள் வரும்போதே குறைந்த விலையில் கிடைக்கும் மது வகை களை எதிர்பார்த்து டாஸ்மாக் கடை களுக்கு வருகிறார்கள். எனவே இதுபோன்ற மதுவகைகள் ஓட்டம் அதிகமாக இருக்கும். தற்போது இந்த வருவாயை மடைமாற்றும் நோக்கத்தில், அதிக மூவிங் இருக் கும் லோ ரேஞ்ச் மதுவகைகளை டாஸ்மாக் கடைகளுக்கு விநி யோகிப்பதற்கு தயங்குகிறார்கள். ரேசன் முறையில் இந்த மது வகை கள் டாஸ்மாக் கடைகளுக்கு வழங் கப்படுகிறது. அதேநேரத்தில், எப்எல்-2 கடைகளுக்கு தாராள மாக விநியோகம் செய்கிறார்கள். குறிப்பாக, கோவை வடக்கு மற் றும் தெற்கு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் நிர்வாகம்தான் இத்த கையை செயலில் ஈடுபடுகிறது. இதன் பின்னணியில் உள்ள மர்மம் தான் என்னவென்று விளங்க வில்லை. அங்கு கொடுத்தாலும் வருவாய்தான், இங்கு கொடுத்தா லும் வருவாய்தான் என்கிற வாதம் வைக்கப்படுகிறது. ஆனால், டாஸ் மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையில் விற்கப்படுகிறது. ஆனால் இதே மதுவகைகள் தனி யார் எப்எல்-2 கடைகளில் தங்களது இஷ்டத்திற்கு விலை வைத்து விற் பனை செய்கின்றனர். இதுகுறித்த எந்த ஆய்வும் நடத்தப்படுவ தில்லை, நடவடிக்கையும் எடுக்கப் படுவதில்லை. இவர்களின் அதிரடி ஆய்வுகள் எல்லாம், அப்பாவி டாஸ் மாக் ஊழியர்களை குறிவைத்தே  நடைபெறுகிறது. எனவே, இந்த பண் டிகை காலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, லோ ரேஞ்ச் மதுவகைக ளை டாஸ்மாக் கடைகளுக்கு கட் டுப்பாடு இல்லாமல், கடைகளின் மேற்பார்வையாளர்கள் கேட்கும் அளவிற்கு வழங்க வேண்டும், என் றார்.