ஈரோடு, செப்.19- டாஸ்மாக் நிறுவனத்தின் கடை ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக் கோரி சிஐடியு ஈரோடு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர், மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் கடை ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண் டும். கடை ஆய்வின் போது குற்றம் நிரூபிக்கப்படும் போது மேற்பார்வையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மது பான விற்பனையில் இலக்கு நிர்ணயிக்கக் கூடாது. தளர்வு நேரம் தவிர பிற நேரங்களில் மனமகிழ் மன்றம், எப்எல்2 உள்ளிட்ட பார்களிலும் மதுவிலக்கை உறுதிப்படுத்த வேண் டும். கடைகளின் மின் கட்டணத்தை மாவட்ட மேலாளர் அலுவ லகம் மூலம் செலுத்திட வேண்டும். கடை ஊழியர்களின் பணி நிரந்தர வழக்கில் நிர்வாகம் மேல் முறையீடு செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் என்.முரு கையா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் பொதுச் செய லாளர் வி.பாண்டியன், பொன்.பாரதி ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். பவானி தாலுகா பொது தொழிலா ளர் சங்கச் செயலாளர் எஸ்.ஜெகநாதன் வாழ்த்தி பேசினார். நிறைவாக சங்கத்தின் பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறி னார்.