districts

நடைமுறை எதார்த்தம் அறியாத அதிகாரிகள் அவதியுறும் டாஸ்மாக் ஊழியர்கள்

கோவை, மே. 10- டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில், நடைமுறை எதார்த் தத்தை உணராத அதிகாரிகளால் டாஸ்மாக் ஊழியர்கள் அவதிக்குள் ளாகி வருகின்றனர். தமிழ்நாடு வாணிபக்கழகத்தின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் இயங்கு கிறது. கோவை மாவட்டத்தில், தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங் களில் 300க்கும் மேற்பட்ட டாஸ் மாக் சில்லறை மதுக்கடைகள் செயல்படுகிறது. இந்த சில்லறை கடைகளில் சுமார் 1200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இது போன்று, தமிழகம் முழுவதும் ஆயி ரக்கணக்கான ஊழியர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்க ளுக்கு எந்த வித சட்ட சமூக பாது காப்போ இல்லாத நிலையே இன்று வரை நீடிக்கிறது. பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கால முறை ஊதி யம் வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகள் கடந்த 20 ஆண்டுக ளுக்கு மேலாக இவ்வூழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, பணியிடத் திலும் எப்போதும் பாதுகாப்பற்ற சூழலையே டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். பல் வேறு பகுதிகளில் கொலை வெறி  தாக்குதலுக்கு உள்ளாகி பல டாஸ் மாக் தொழிலாளர்களின் உயிர்கள் பலியாகி உள்ளது. இதுபோன்றே, விற்பனை செய்யப்பட்ட தொகையை வங்கிக்கு செலுத்த செல்கிறவர்களை திட்டமிட்டு தாக் குதல் நடத்தி பணத்தை பறிக்கிற  சமூக விரோதிகளின் தாக்குதல்க ளையும் தொடர்ந்து எதிர் கொண்டு வருகின்றனர். டாஸ்மாக்  கடைகளில் விற்பனை செய்யப் பட்ட தொகையை வங்கி நிர்வா கமே நேரிடையாக வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற டாஸ் மாக் ஊழியர்களின் கோரிக்கைக ளும் இதுவரையில் ஏற்றுக்கொள் ளப்படவில்லை. இதுபோக இவர்க ளின் வேலை நேரமோ காலை 12 மணிமுதல் இரவு 10 மணிவரை என  நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், கள  எதார்த்தத்தில் காலை 11 மணிக்கே  கடைக்கு வந்து, விற்பனைக்கான ஆரம்ப கட்ட பணிகளை (ஓப்பனிங்  பேலன்ஸ், ரன்னிங் கேஸ் இறக்கி டவுடவும், பீர் வகைகளை குளிரூட் டும் பெட்டியில் அடுக்கிட) மேற் கொள்ள வேண்டியுள்ளது. இதே போன்று இரவு பத்து மணிக்கு விற்ப னையை நிறுத்திவிட்டு கடையை  பூட்டினாலும், சுமார் 12 மணிவரை யில், விற்பனை செய்யப்பட்ட தொகையை சரிபார்ப்பது, மது  வகைகளின் இருப்பை சரிபார்ப் பது உள்ளிட்ட பணிகளை மேற் கொள்ள வேண்டியுள்ளது. இது  டாஸ்மாக் ஊழியர்களின் அன்றாட  பணிகளில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், கோவை காந்தி புரத்தில் உள்ள டாஸ்மாக் சில் லறை மதுபானக்கடையில் ஊழியர்  ஒருவர் காலை 11 மணிக்கு வந்து,  டாஸ்மாக் கடைக்குள் சென்று அன் றைய நாளுக்கான முன்தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது, அவ்வழியாக ரோந்து  வந்த காட்டூர் காவல் ஆய்வாளர்  கடைக்குள் இருந்த ஊழியரை, சட்டவிரோதமாக கடைக்குள் இருப் பதாக மிரட்டி காவல் நிலையத் திற்கு அழைத்து சென்றுள்ளார். இத னையறிந்து சிஐடியு, எல்பிஎப் உள் ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள்  உடனடியாக தலையிட்டு, வழக்க மான பணிகளை மேற்கொள்ளவே ஊழியர் வந்துள்ளதாக தெரிவித் ததையடுத்து காவல்துறையினர் அந்த ஊழியரை விடுவித்துள்ள னர்.   இது ஒருபுறமிருக்க, இச்சம்ப வத்தை அடிப்படையாக கொண்டு  கோயம்புத்தூர் டாஸ்மாக் மேலா ளர் (வடக்கு) வெளியிட்டுள்ள சுற்ற ரிக்கையில், அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் விற்பனை நேரமாக காலை 12  மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு  மூடிவிட வேண்டும் எனவும், அனு மதிக்கப்பட்ட நேரத்தை தவிர டாஸ் மாக் ஊழியர்கள் கடையினுள் இருக்க கூடாது என உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. இது டாஸ்மாக்  ஊழியர்களிடையே பேசு பொரு ளாகி உள்ளது.  இதுகுறித்து டாஸ்மாக் ஊழி யர்கள் கூறுகையில், புதிதாக டாஸ் மாக் நிறுவனத்தில் பொறுப்பேற் கிற அதிகாரிகளுக்கு எதார்த்த நடைமுறையே தெரிவதில்லை.  காலை 12 மணிக்குத்தான்  வரவேண்டும் என்றால், ஒரு மணிக் குத்தான் சில்லறை விற்பனையை ஆரம்பிக்க முடியும். இதேபோன்று  இரவு 9 மணிக்கு விற்பனையை நிறுத்திவிட்டு கடையை மூடிவிட்டு,  கணக்கு வழக்குகளை பார்த்து விட்டு சரியாக 10 மணிக்கு கடையை  பூட்டிவிட்டு சென்று விடுகிறோம்.

இப்படி செய்வதில் எங்களுக்கு ஒன் றும் ஆட்சேபனை இல்லை. நடை முறையில் எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து அதிகாரிகள் சுற் றரிக்கை விடவேண்டும். அப்படி  செய்யாமல் எழுதி வைத்துள்ளதை  அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எப்படி சாத்திய மாகும். ஒரு வங்கியில் பண பரி வர்த்தனை காலை பத்து மணிக்கு  துவங்கும் நிலையில், ஊழியர்கள்  9 மணிக்கே வருகிறார்கள். அதெல் லாம் முடியாது நீங்கள் பத்து மணிக் குத்தான் வரவேண்டும் என்று உத்த ரவு பிறப்பித்தால் எப்படி வேடிக்கை யாக இருக்குமோ அப்படித்தான் டாஸ்மாக் அதிகாரிகளின் உத்தர வும் உள்ளது. மேலும், நேற்று டாஸ் மாக் ஊழியர் ஒருவர் கடை திறக் கும் நேரத்திற்கு முன்பே வந்து  கடைக்குள் இருந்தார் என காவல்து றையினர் காவல் நிலையம் அழைத்து சென்று விட்டனர். இத்தக வலை அறிந்த டாஸ்மாக் வடக்கு மாவட்ட மேலாளர் தலையிட்டு, அவரை மீட்டிருக்க வேண்டும். நடைமுறையில் டாஸ்மாக் ஊழி யர்களின் வேலை நிலை குறித்து காவல்துறையினரிடம் தெளிவு படுத்தியிருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு காவல்துறையினரின் நடவடிக்கைக்கு சாதகமாக சுற்ற ரிக்கை வெளியிட்டுள்ளது வன்மை யாக கண்டிக்கத்தக்கது. உரிய  நேரத்தில் தொழிற்சங்க தலை வர்கள் தலையிட்டதால், காவல்  நிலையம் அழைத்து சென்ற ஊழி யர் மீட்கப்பட்டார். தமிழ்நாட்டில் எந்த டாஸ்மாக் மேலாளர்களும் இதுபோன்ற சுற்றரிக்கை விடாத  நிலையில் கோவை வடக்கு மாவட்ட மேலாளர் மட்டும் இது போன்ற சுற்றரிக்கை விட்டி ருப்பது, டாஸ்மாக் ஊழியர்களை இவர் கைவிட்டு விட்டாரோ என்கிற  ஐயம்தான் எழுகிறது என்றனர்.  இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வாணிஸ்ரீ ஜெகதாம்பாளிடம் கேட் கையில், அனுமதிக்கப்பட்ட நேரத் திற்கு முன்பும், பின்பும் சுமார் அரை  மணிநேரமாவது கடையில் இருந்து  பணிகளை இறுதிப்படுத்த வேண் டும் என்பதை ஒப்புக்கொள்கிறார். அதேநேரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இது போன்ற சுற்றரிக்கை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.