districts

img

இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த தாராபுரம் பூங்கா

தாராபுரம், மே 24- இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தாராபுரம் நகராட்சி பூங்கா செவ்வா யன்று திறக்கப்பட்டது. தாராபுரம் நகராட்சி பூங்கா திறப்பு விழா நகராட்சி ஆணை யாளர் ராமர் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற தலை வர் கே.பாப்பு கண்ணன் பூங்காவை திறந்து வைத்து கூறுகை யில், தாராபுரம் நகராட்சி பூங்கா கடந்த 2 ஆண்டுகளாக பராம ரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் பூங்காவை பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நக ராட்சி நிதியில் பராமரிக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்கா மீண் டும் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மாலை நேரத்தில் ஓய்வு எடுக்கவும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற் கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலை வர் ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் கமலக்கண் ணன், முருகானந்தம், துரை சந்திரசேகர், ஹைடெக் அன்பழ கன், சீனிவாசன், மொரட்டாண்டி, ஷாலினி, யூசுப், முத்து லட்சுமி, தேவி அபிராமி, சக்திவேல், ஸ்ரீதர், மீனாட்சி, செலின் புளோமினா, புனிதா, கல்பனா உட்பட பலர் கலந்து கொண்ட னர்.