districts

img

தமுஎகச, வாலிபர் சங்கத்தின் மக்கள் ஒற்றுமை கலை இரவு

கோவை, பிப்.13- தமுஎகச, வாலிபர் சங்கம் சார்பில் அன்னூரில் நடைபெற்ற மக்கள் ஒற் றுமை கலை இரவு விழாவினை ஆயிரக் கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். கோவை மாவட்டம், அன்னூர் கூத் தாண்டவர் கோவில் வீதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் சங்கத்தின் சார்பில் 13 ஆம் ஆண்டு மக்கள் ஒற் றுமை கலைவிழா நடைபெற்றது. சனி யன்று துவங்கிய விழா ஞாயிறன்று இரவு நிறைவு பெற்றது. இரண்டு நாட் கள் நடைபெற்ற இவ்விழாவில் ஆயி ரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்த னர்.  இதில் சிவகங்கை மாவட்ட கலைக் குழுவின் பறையாட்டம், மரக்கால் ஆட் டம், மாடாட்டம், மானகொம்பு ஆட்டம், இராமநாதபுரம் மாவட்டத்தின் ஜூம் முலா மேளம், சென்னை சுவாசம் கலைக் குழுவின் சிலம்பாட்டம், ஆட்டம், கோவை அலேக்ரோ கலைக்குழு பல் சுவை நடனம் உள்ளிட்ட பல்வேறு வகை யான கலைநிகழ்வுகள் நடைபெற்றது. குறிப்பாக, தீரன் கலைக்குழுவினரின் கம்பத்தாட்டம் இளைஞர்கள், பொது மக்களை வெகுவாகவே கவர்ந்தது. இத னைத்தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான பல்வேறு வகை விளையாட்டுப் போட்டிகளும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும், பல் வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு விருது வழங் கும் நிகழ்வும் நடைபெற்றது. இரண்டு நாள் நிகழ்வில் கருத்துரை யாக மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், வட சென்னை மாவட்ட செயலாளர் ஜி. செல்வா, சிபிஎம் கோவை மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் மனோகரன், கனக ராஜ், வாலிபர் சங்க மாவட்ட செயலா ளர் அர்ஜூன் ஆகியோர் உரையாற்றி னர்.