districts

img

“வட்டாட்சியரை பார்க்கவே மூன்று நாள் ஆகுது”

கோவை மாவட்டம், ஆனைமலை புலி கள் காப்பகம், உலாந்தி வனச்சரகத்திற்குட்பட்டது கூமாட்டி வனகிராமம். அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இக் கிராமத்தில் மகா மலசர் சமூகத் தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி யில் கிடைக்கக்கூடிய மலை இடு பொருட்களான தேன், மா, இஞ்சி, கடுக்காய், சீயக்காய், மஞ்சள், குச்சி கிழங்கு, மாகானிக்கிழங்கு, நன் னாரி உள்ளிட்டவற்றை சேகரித்து  விற்பனை செய்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த பழங்குடி யின மக்கள் அவசர மருத்துவ தேவை களுக்கு மருத்துவமனை செல்வதற்கு கூமாட்டியிலிருந்து மானாம்பள்ளி பேருந்து நிறுத்தத்திற்கு 13 கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இப்பகுதி யில் பெண்களுக்கு மகப்பேறு காலத் தில் தொட்டில் கட்டி தூக்கி வர வேண் டிய அவலநிலை இன்றளவும் தொடர் கிறது.

வாகன வசதி இல்லை

கூமாட்டி மலை கிராமத்திற்கு செல்ல பாதை வசதி இருந்தும், வனத் துறையின் மூலமாக ஜீப் வாகன வசதி கள் ஏதும் இல்லாத காரணத்தால் பழங்குடியின மக்கள் கடுமையான  சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதியிலுள்ள பழங்குடியின மக் கள் வாழ்வாதார நலத்திட்ட உதவி கள் பெற வேட்டைக்காரன்  புதூர் பேரூ ராட்சி அலுவலகம் மற்றும் கிராம நிர் வாக அலுவலரை சந்திக்கவும், ஆனை மலை வட்டாட்சியர் அலுவலகம் வந்து செல்ல மூன்று நாட்கள் முழுமையாக தேவைப்படுகிறது. எனவே, வனத் துறை மூலமாக குறைந்தபட்ச கட்ட ணத்தில் கூமாட்டி பழங்குடியின மக் கள் சென்றுவர வாகன வசதி ஏற்பாடு செய்து தரவேண்டும். மேலும், கூமாட்டி பகுதியில் ஓட்டுநர் பயிற்சி முடித்த பழங்குடியின இளைஞர்க ளுக்கு வருவாய்த்துறை மற்றும் வனத் துறை மூலமாக மானிய கடன் ஏற்ப டுத்தி வாகனம் இயக்க அனுமதி வழங்க வேண்டும்.

மின்சாரம் வேண்டும்
இதனிடையே கூமாட்டி மலை கிரா மத்திலிருந்து மானாம்பள்ளி பவர் ஹவுஸ் 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வால்பாறை மற்றும்  ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப் படுகிறது. ஆனால்,  இன்றளவும், கூமாட்டி மலைக்கிரா மத்தில் சோலார் மின்விளக்கு மட் டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால், மழைக்காலங்களில் போதிய சூரிய ஒளியின்றி  வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே சோலார் மின் விளக்குகள் இயங்குகிறது. எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு கேரள மாநி லத்தை போன்று பாதுகாப்பான முறை யில், நிலத்தடியில் மின் வயர்கள் கொண்டு சென்று, மின்சாரம் ஏற்ப டுத்தி தர வேண்டும்.

அகழிகளை ஆழப்படுத்திடுக

அடர்ந்த வனப்பகுதியில் அமைந் துள்ள கூமாட்டி கிராமத்தில், வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் வனத்துறை சார்பாக அகழிகள் வெட்டப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தி தரப்பட் டது. தற்போது அப்பகுதி முழுவதும் மண் மூடியுள்ளதால், வனவிலங்கு கள் பழங்குடியின மக்கள் குடியிருப்பு களுக்குள் தினமும் வந்து விடுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும், அப்பகுதி மக்கள் விவசாயம் செய்யக்கூடிய பகு திகளிலும்  வனவிலங்குகள் உலா வரு கிறது. எனவே போர்க்கால அடிப்படை யில் கூமாட்டி கிராமத்தைச் சுற்றி அகழி களை ஆழப்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும்

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கல்லார் குடி, நெடுங்குன்று, சங்கரங்குடி, பால கனாறு, காடம்பாறை கீழ்பூனாட்சி, நாகரூத்து, 2 செட்டில்மென்ட், சர்க்கார் பதி, எருமைபாறை, கோழிகுத்தி, சின் னார்பதி, நவமலை உள்ளிட்ட வன  கிராமங்களில் வசிக்கின்ற பழங்குடி யின பெண்களுக்கு  வேலைவாய்ப் பினை ஏற்படுத்த வேண்டும். காடு களில் கிடைக்கக்கூடிய மலை இடு பொருட்களை சேகரித்து விற்பனை செய்ய மற்றும்  கைவினைப் பொருட் களை தயாரிக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். பழங்குடியின பெண்க ளின் வாழ்வாதாரம் காத்திடும் வகை யில் தமிழக அரசு இதனை முன்வந்து செய்து தரவேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம் தமிழ்நாடு அரசுக்கும், வனத்துறை அமைச்சருக்கும் கோரிக்கை விடுத் துள்ளார். (ந.நி)