சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும், மாதர், மாணவர், வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக கோவையில் செவ்வாயன்று, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாதர் சங்க பொதுச்செயலாளர் ஏ.ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.