districts

img

திருப்பூரில் ஆக.14இல் உறுதிமொழி ஏற்பு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை முடிவு

திருப்பூர், ஜூலை 31 - அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பதுடன், சமூக நல்லி ணக்கத்தையும் பாதுகாப்போம் என்று ஆகஸ்ட் 14ஆம் தேதி  திருப்பூரில் உறுதிமொழி ஏற்பது என்று தமிழக மக்கள் ஒற் றுமை மேடை முடிவு செய்துள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் பி.மோகன் தலை மையில் திருப்பூர் காங்கேயம் சாலை பொதிகை மகாலில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணப்பாளர் க.உத யகுமார் கலந்து கொண்டு அமைப்பின் நோக்கம் பற்றி எடுத்துக் கூறி, அனைத்து தாலூக்கா மட்டத்திலும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைக்கப்பட வேண்டும் என வேண் டுகோள் விடுத்தார். மேலும் சமீப காலங்களில் சமூகத்தில் வெறுப்புணர்வு அதி களவில் தூண்டப்படுகிறது. மக்களிடையே மத மோதல் களை தூண்டிவிடும் அபாயகரமான போக்குகள் தலை தூக்கி யுள்ளன. மக்கள் ஒற்றுமை பாதிக்கப்படுமானால் சமூகத்தில்  அமைதி கெட்டுவிடும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து  தடுக்கவும், சமூகத்தில் ஒற்றுமை நிலைநாட்டவும் பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, திராவிடர் கழகம்,  தந்தை பெரியார் திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி, இந்து, இஸ்லாமிய, கிறித்துவ அமைப்புகளைச் சேர்ந்த வர்கள், சன்மார்க்க சங்க உறுப்பினர்கள் என திரளாக கலந்து  கொண்டனர். வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு  தியாகி குமரன் சிலை அருகில் அரசியல் சட்டத்தை பாதுகாப் போம், சமூக நல்லிணத்தை பாதுகாக்க பாடுபடுவது என்று  உறுதிமொழி ஏற்க முடிவு செய்யப்பட்டது. அனைத்து சமூகத்தினர் உள்ளடங்கிய 37 பேர் கொண்ட  ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பா ளராக பி.மோகன் செயல்படுவது என்று முடிவு எடுக்கப்பட் டது. செல்வி அப்ஸியா நன்றி கூறினார்.