அவிநாசி, செப்.15 – அவிநாசியில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஆலோசனைக் கூட்டம் வியாழ னன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.ஈஸ்வரன், வழக்கறிஞர் பி.மோகன், எல்.ஐ.சி. பழனிசாமி ஆகியோர் இந்த அமைப்பின் நோக்கம், செய்ய வேண்டிய பணிகள் குறித்துப் பேசினர். இக்கூட்டத்தில், மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் தங்கவேல், செயலாளர் சுந்தரவடிவேல், ஒன் றிய கவுன்சிலர் முத்துசாமி, நல்லது நண்பர்கள் ரவி, நடராஜ், குமார ராஜா, சையத்முகமது, முகமது சித்திக், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க துணைத்தலைவர் நடராஜ், பாபுலால், கிறிஸ்துவ முன்னணி மாவட்டத் தலைவர் தங்க வேலாயுதம், முசாபர் ஆலம், அப்துல் மஜீத், அரசு கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மணிவண்ணன், தமுஎகச.தினகரன், பழனி சாமி, சாயிகண்ணன், கோபாலகிருஷ்ணன், தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் அவிநாசி ஒருங்கிணைப்பாளராக எல்ஐசி பழனிச்சாமி தேர்வு செய்யப் பட்டார். இவருடன் சேர்த்து 21 பேர் கொண்ட குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.