திருப்பூர், பிப்.8- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலை வர் க.அன்பழகன் தலைமையில் மதிப்பீட்டுக் குழு உறுப்பி னர்கள் வியாழனன்று திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் ஆய்வு மேற்கொண்டார்கள். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலை வர் க.அன்பழகன் தலைமையில் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் கள் காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்த னைசெல்வன், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே.ராஜு, ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எ ஸ்.இராமச்சந்திரன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந் தாமன், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம் ஆகி யோர் வியாழனன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் செயல்பா டுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட னர். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூடு தல் செயலாளர் பா.சுப்பிரமணியம், துணைச்செயலாளர் சு. பாலகிருஷ்ணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ந. கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி, பொதுமேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார், மற்றும் தொடர்புடைய அலுவ லர்கள் உடனிருந்தனர்.