தருமபுரி, டிச.31- ஆந்திர மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்ட சித்தேரி பழங்குடியின கூலித் தொழிலாளர்களின் குடும்பத் திற்கு நிவாரணம் வழங்கக்கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தினர் அரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், சித்தேரியை சேர்ந்த மலைவாழ் மக்கள் சிலர் ஆந் திராவுக்கு கூலி வேலைக்கு சென்ற னர். அவர்களில் ராமன், பாலகிருஷ் ணன் ஆகியோர் கடந்த மாதம் மர்ம மான முறையில் உயிரிழந்தனர். இவர்கள் வனப்பகுதியில் சட்ட விரோதமாக செம்மரம் வெட்டியதா கக் கூறி ஆந்திரா வனத்துறையின ரால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு கூலி வேலைக்கு சென்ற 20 தொழிலாளர் கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் 7 பேர் சித்தேரி மலை கிராம பழங்குடியினராவர். இதேபோல், கூலி வேலைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் ஆந்திரா வனத்துறையின ரால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். எனவே, சிறையில் உள்ள கூலி தொழிலாளர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் நிவா ரணம் வழங்க வேண்டும். வேலை தேடி புலம் பெயர்தலை தடுக்க சித் தேரி மலைப் பகுதியில் வேளாண் சார்ந்த தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்க பொறுப்பா ளர் எஸ்.கே.கோவிந்தன் தலைமை வகித்தார். இதில், மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்ட தலை வர் ஏ.கண்ணகி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ.அர்ச் சுணன், குருமன்ஸ் பழங்குடி சங்க மாவட்ட செயலாளர் சொக்கலிங் கம், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ. குமார், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் இரா.சிசுபாலன், ஆர்.மல் லிகா, ஒன்றியச் செயலாளர்கள் பி. குமார், கே.தங்கராஜ், தனுஷன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.வஞ்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.