கிராம வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர் கள் அஸ்தம்பட்டி தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் பரிதிராஜா, பொதுச்செயலாளர் அஸ்வத், சங்கத்தின் தமிழ்நாடு பாண்டிச்சேரி பொதுச்செயலாளர் மாதவராஜ், ஓய்வூதியர் சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணன், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநிலச் செயலாளர் எஸ்.ஏ.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.