திருப்பூர், ஜூலை 9 - இந்து மலைப்புலையர் இனத்தை மீண் டும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசும், ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் பரிந்துரைத்து, உடனடியாக திருமூர்த்தி மலை பகுதியைச் சேர்ந்த மலைப்புலையர் இன மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் செவ்வாயன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உடுமலைப்பேட்டை வட்டம் திருமூர்த்தி மலை தளிஞ்சி பகுதியில் உள்ள 9 செட்டில் மெண்டுகளில் தளிஞ்சி, கோடந்தூர், குறு மலை, ஈசல்திட்டு, குளிப்பட்டி, திருமூர்த்தி நகர், மாவடப்பு, காட்டுப்பட்டி, புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் இந்து மலைப்புலையர் இன மக்கள் வசித்து வருகின்றனர். தற் போது இந்த வகுப்பானது பட்டியலினத்தில் உள்ளது. ஆனால் இவர்கள் மலைப்பகுதி யில் வசித்து வரும் மலைப்புலையர் என்ற பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்கு மீண்டும் பழங்குடியினர் சான்று வழங்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட் டக்குழு சார்பில் கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்து றைக்கும் மனு அனுப்பட்டது. அந்த மனுவிற்கு பதில் அனுப்பியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளர் க.லட்சுமிபிரியா, இந்து மலைப்புலையர் இனத்தினை பழங்குடியி னர் பட்டியலில் சேர்ப்பது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. இந்திய அர சியலமைப்பு சட்டம் 1950, 1956 மற்றும் இந்திய அரசியலமைப்பு திருத்த சட்டம் 1976 மற்றும் 2022இன் படி வெளியிடப்பட்டுள்ள பழங்குடி யினர் பட்டியல்களில் குறிப்பிட்டுள்ள இனங் களுக்கு மட்டுமே பழங்குடியினர் சாதி சான்றி தழ் வழங்க இயலும் என்று தெரிவித்துள் ளார். இது ஏற்புடையதல்ல. ஏற்கனவே இதே மலைப்புலையர் இன மக்களுக்கு சட்டப்படி இந்து மலைப்புலையன் என கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட் டத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 1977 கொடைக்கானல் வட்டாட்சி யரால் பெரியூர் கிராமத்தை சேர்ந்த நபருக்கு இந்து மலைப்புலையன் சாதி சான்றிதழ் வழங் கியுள்ளனர். தற்போது ஒன்றிய அரசு இந்து மலைப்பு லையர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இந்த இனத்தை சேர்ந்த மக்கள் காடுகளை நம்பி வாழ்வு நடத்துபவர்கள். எனவே இந்த மக்களை மீண் டும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசும், ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் பரிந்துரைக்க வேண்டும். அத்துடன் உடனடி யாக திருமூர்த்தி மலை பகுதியைச் சேர்ந்த மலைப்புலையர் இன மக்களுக்கு பழங்குடி யினர் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள் வதாக மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் கூறியுள்ளார்.