districts

img

குளத்தை மேம்படுத்த ஒதுக்கீடு

அவிநாசி,ஏப்.7- திருமுருகன்பூண்டி நகராட்சியில், ராசாத்தா கோயில் குளத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 1.34  கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன்பூண்டி நகராட்சி  கிளைகள்  நன்றி தெரிவித்துள்ளனர்.  திருமுருகன்பூண்டி நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நகர மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு போட்டியிட்டனர். இதில் தேர் தல் வாக்குறுதியாக, ராசாத்தா கோயில் குளம்  மேம்படுத் துவதாக கூறியிருந்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1.34 கோடி  மதிப்பீட்டில்  குளத்தை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ் துவக்கி வைத்தார். இதற்கு  திருமுருகன் பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகராட்சி  கிளைகள் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கப் பட்டுள்ளது.