districts

img

தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்

கோவை, ஜன. 5- கோவையில் தமிழ் எழுத்துக்க ளால் ஆன திருவள்ளுவர் சிலை, அறிவுசார் மையம், அனுபவம் மையத்தை தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத் தார். சென்னை தலைமை செயலகத் தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட் டங்களில் முடிவற்ற திட்ட பணி களை காணொளி காட்சி வாயிலாக  திறந்து வைத்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் ஆடிஸ் வீதி யில் மாநகராட்சி சார்பில் 2.50 கோடி  மதிப்பில் கட்டப்பட்ட நூலகம் மற் றும் அறிவுசார் மையம், குறிச்சி பகு தியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்  ரூ.52.16 கோடி மதிப்பில் தமிழ் எழுத் துக்களால் வடிவமைக்கப்பட்ட திரு வள்ளுவர் சிலை, குறிச்சி குளக்க ரையில் அமைக்கப்பட்டுள்ள தமிழர் பாரம்பரிய சிலைகள், உக்க டம் பெரியகுளம் மேற்கு கரை யில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள அனுபவ மையம் ஆகிய வற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதன் மொத்த மதிப்பு ரூ.57.66 கோடி ஆகும். இதன் நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சி அறிவுசார் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாந கராட்சி ஆணையாளர் சிவகுரு பிர பாகரன், துணை மேயர் வெற்றி செல்வன், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் மற்றும் மண்டலத் தலை வர்கள், மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் கார்த்திகேயன்   உட்பட பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இவற்றைத் திறந்து வைத்ததும் மாவட்ட ஆட்சியர், மாந கராட்சி ஆணையாளர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி அறிவு சார் மையத்தில் உள்ள வசதிகளை பார் வையிட்டனர். மேலும் அறிவு சார்  மையத்தில் இருக்கும் ஸ்மார்ட் வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திரையில் மாவட்ட ஆட்சியர் Best Wishes என எழுதி  அவரது வாழ்த்துக்களை தெரிவித் துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து குறிச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திரு வள்ளுவர் சிலையை பார்வை யிட்டு மலர் தூவி மரியாதை செலுத் தினர். இந்நிகழ்வில் பலூன்கள் பறக்க விடப்பட்டது. மேலும் அங் குத் திரண்டிருந்த பொதுமக்கள் திருவள்ளுவர் சிலை முன்பு புகைப் படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த குறிச்சி பகுதியில் மிதிவண்டி  பாதை, நடை பாதை, உணவகங் கள், அலங்கார குடைகள், சிறுவர் விளையாட்டு திடல், பாரம்பரிய சிலைகள் என ஏராளமானவை அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் அமைக்கப்பட்டுள்ள அனுபவ மையத்தை பார்வையிட்டனர். இங்கு 3டி முப்பரிமாண காணொளி, கோவை மாநகர சிறப் புகளை விளக்கும் வகையில் 3டி  காணொளி, குழந்தைகள் விளை யாட்டு 3டி காணொளி ஆகிய கட்ட மைப்புகள் ஜிப் லைன், இரண்டு  பேர் ஓட்டும் சைக்கிள் ஆகியவை  இடம் பெற்றுள்ளன. இதனை பார் வையிட்ட மாவட்ட ஆட்சியாரும் மாநகராட்சி ஆணையாளரும் இரண்டு பேர் ஓட்டும் சைக்கிளை ஓட்டி பார்த்து மகிழ்ந்தனர்.