கோவை, டிச.14- முதலமைச்சர் வருகையையொட்டி கோவையில் நடைபெற்று வரும் முன் னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகின்ற டிசம்பர் 18 ஆம் தேதி கோவையில் பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்க வருகை தர உள் ளார். முதல் நிகழ்ச்சியாக, நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் கலைய ரங்கில் நடைபெறும் மக்களுடன் முதல் வன் திட்ட துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய் வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையா ளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து, அமைச்சர் சு. முத்துசாமி செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது பேசிய அவர், கோவை யில் வருகின்ற 18ஆம் தேதி மக்களுடன் முதல்வன் என்ற திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் பொதுமக்க ளுக்கான அனைத்து அடிப்படை வசதி களும், உணவு ஏற்பாடுகளும் செய்யப் பட உள்ளதாகவும், இதனை தொடர்ந்து செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டு விழா நிகழ்வில் முதல்வர் கலந்து கொள் கிறார். அதே இடத்தில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட உள்ளது, என்றார்.