தருமபுரி, பிப்.27- மனித நாகரீகமின்றி நடந்து கொண்ட பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் தருமபுரியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ரயிலில் முதியவர் ஒருவரிடம் மனித நாகரீகமின்றி நடந்து கொண்ட பாஜக பிரமுகரின் செயல் ரயில் பய ணிகளிடயே முகம் சுழிக்க வைத்த நிலையில், இதனை தட்டி கேட்ட தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் பொதுச்செயலாளர் கே.சாமு வேல்ராஜிடம், அதிகார திமிரோடு நடந்து கொண்ட பாஜக திருப்பதி நாராயணனின் செயலை கண்டித்து தருமபுரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, அமைப்பின் மாவட்ட தலை வர் பி.ஜெயராமன் தலைமை ஏற் றார். இதில், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டி.மாதையன் மாவட்ட பொருளாளர் கே.கோவிந்தசாமி மாவட்ட துணைத்தலைவர் பி.சங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி, சிஐடியு மாநிலச் செய லாளர் சி.நாகராசன், மாவட்ட செய லாளர் பி.ஜீவா ஆகியோர் கன்டண உரையாற்றினர். முன்னதாக, ரயில் பயணத்தின் போது கே.சாமுவேல்ராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக திருப்பதி நாராயணனை கண்டித் தும், அவரை கைது செய்ய வலியு றுத்தியும் முழக்கங்களை எழுப்பி னர்.