கோவை, ஆக.1- ஒன்றிய மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகம் புறக் கணிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழனன்று தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் ஆவேச மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத் தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் இரா.முத்தர சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆவேச மறியல் போராட்டம் நடைபெற் றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சி.சிவ சாமி, சிபிஐஎம்எல் மாவட்டச் செய லாளர் பாலசுப்பிரமணியன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதி கா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் யு.கே.சிவஞானம், கே. அஜய்குமார், கே.மனோகரன், எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே.எஸ்.கனக ராஜ், என்.ஆறுச்சாமி, என்.ஆர். முருகேசன், ஆர்.கோபால், வி.தெய் வேந்திரன் மற்றும் சிபிஎம் கோவை மாநகராட்சி மாமன்றக் குழு தலைவர் வி.இராமமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.பூபதி, கண்ணகி ஜோதிபாசு, சுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமு கம், மாவட்டச்செயலாளர் எஸ்.சிவ சாமி, பொருளாளர் தங்கவேல், துணைச்செயலாளர்கள் ஜேம்ஸ், குணசேகரன், சிபிஐ கோவை மாநகராட்சி மாமன்றக்குழு தலை வர் சாந்தி சந்திரன், சிபிஐ(எம்எல்) மாவட்டச்செயலாளர் பாலசுப்பி ரமணியன், மாநிலக்குழு உறுப்பி னர் பெரோஸ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினர் பிலோமீனா, நாரய ணன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டு கைதாகினர். உதகை இதேபோன்று நீலகிரி மாவட் டத்தில், குன்னூர், ஊட்டி, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி ஆகிய மையங்களில் ஒன்றிய அரசு அலு வலகங்கள் முன்பு மறியல் போராட் டம் நடைபெற்றது. இதில், நூற்றுக் கும் மேற்பட்ட இடதுசாரி கட்சி களை சேர்ந்தவர்கள் பங்கேற்று கைதாகினர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் வி.ஏ.பாஸ்க ரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வினோத், நவீன்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் போஜராஜ், ரங்கராஜன், சிபிஐ(எம்எல்) கே.ரங் கராஜ் மற்றும் சிபிஎம் வர்க்கீஸ், குஞ்சுமுகமது, பிஜூ, இளங்கோ வன் உள்ளிட்ட தலைவர்கள் பங் கேற்று கைதாகினர். ஈரோடு ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பிருந்து பேர ணியாக சென்று, டெலிபோன் பவன் முன்பு மறியலில் ஈடுபட இடது சாரி கட்சியினர் சென்றனர். சிறிது தூரத்தில், காவல்துறையினர் பேரணியைத் தடுத்தனர். இதனைத் தொடர்ந்து சாலைமறியலில் ஈடு பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பி னர் செ.முத்துகண்ணன், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.டி.பிரபா கரன், வடக்கு மாவட்டச் செயலா ளர் எஸ்.மோகன்குமார் மற்றும் சிபிஐஎம்எல் பொறுப்பாளர் கார்த் திகேயன் மற்றும் இடதுசாரி கட்சி களின் மாவட்ட செயற்குழு, மாவட் டக்குழு, ஒன்றிய, நகர, தாலுகா செயலாளர்கள் உள்ளிட்ட நூற்று கணக்கானோர் கைது செய்யப்பட் டனர்.