districts

img

இலக்கிய வளமும், ஆளுமையும் மிக்கது தமிழ்மொழி

கோவை, நவ.26- இலக்கன இலக்கிய வளமும், ஆளுமை மிக்க நமது தமிழ் மொழியை  இளம்தலைமுறையினர் நன்கு கற்க  வேண்டும் என ஆட்சி மொழி கருத்த ரங்கில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உரையாற்றினார். கோவை, துணிவணிகர் சங்க அரசு  மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சி மொழிக் திட்டச் செயலாக்கம் குறித்த  அரசு அலுவலர்களுக்கான  கருத்தரங்கு  நிறைவுநாள் நிகழ்வு கோவை மாவட்ட  ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அ. புவனேசுவரி, உதவி இயக்குநர் (பேரூ ராட்சிகள்) துவாரகநாத்சிங் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.  இக்கருத்தரங்கில் ஆட்சியர்  ஜி.எஸ்.சமீரன் பேசுகையில், தமிழ் வளர்ச்சித் துறையின் செயல்பாடுகளில்  தலையானது ஆட்சிமொழிச் செய லாக்கமாகும். ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் திட்டங்களைத் தமிழக அரசு  செயல்படுத்தி வருகின்றது.  இதன் ஒரு பகுதியாகத்தான் அலுவலர்களுக்கான  இரண்டுநாள் பயிற்சி நடைபெற் றுள்ளது. அரசு அலுவலர்கள், பணி யாளர்கள் தங்களது கையொப்பத் தினைத் தமிழிலேயே இடம் வேண்டும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அருமையான, இனிமையான, ஆளுமை உள்ள மொழி நம் தமிழ் மொழி. ஒரு மொழி வளர்வதற்கு இலக்கிய வளம் மிகுந்த அவசியம். நம் முடைய தமிழ்மொழி சங்ககாலத்தில் இருந்தே இலக்கண மற்றும் இலக்கிய வளம் கொண்டது. தமிழுக்கு அழகு சிறப்பு “ழ“ ஆகும். இதனை தெளிவாக இன்றைய தலைமுறையினர் கற்க வேண்டும். தமிழ்மொழியின் இலக்கிய  வளத்தைபோல் வேறு எந்தமொழி யிலும் காணமுடியாது. இவ்வளவு பெருமைவாய்ந்த நம்மொழியினை  இன்றைய காலகட்டத்தில் நாம்  கற்பதை பெருமையாக கருதவேண்டும்  என்றார்.  முன்னதாக, தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் 2020ஆம் ஆண்டில்  நடத்தப்பட்ட ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தொண்டாமுத்தூர் சிறப்பு நிலை பேரூ ராட்சி அலுவலகத்திற்குக் கேடயத் தையும், ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி   மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் களுக்கு பரிசுக்கான காசோலை மற்றும்  பாராட்டுச் சான்றிதழ்கள் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.  மேலும், தேசிய அளவில் பெங்க ளுரில் நடைபெற்ற சிலம்பம் போட்டி- 2022ல் ஒற்றைகம்பு சுற்று மற்றும் இரட்டை கம்பு சுற்றில் இரண்டாம் இடத்தை பெற்ற கோவை துணி வணிகர்  சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி  இ.கே.அட்சயா,  தனது பரிசினை ஆட்சியரிடம்  காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.