districts

img

விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா மாணவர் சங்க போராட்டத்தை தொடர்ந்து பேச்சுவார்த்தை

நாமக்கல், ஏப்.9- விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து  தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட் டத்தில் ஈடுபட உள்ளதாக இந்தி மாண வர் சங்கம் அறிவித்த நிலையில், கல் லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு  அழைத்து, உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆண்டகலூர் கேட் அருகே திரு வள்ளுவர் அரசு கலைக்கல்லூரி  விளையாட்டு மைதானத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப் போவதாக, வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த மாதம் விளையாட்டு மைதானத்தை  நிலங்களை அளவீடு செய்தனர். இதனை கண்டித்து இந்திய மாண வர் சங்கம் சார்பாக கடந்த 21 ஆம்  தேதி உள்ளியிருப்பு போராட்டம்  நடைபெற்றது. போராட்டத்தில் கல் லூரி முதல்வர் உயர்கல்வித்துறை அதிகாரியிடம் உங்களது கோரிக்கை  நாங்கள் பரிந்துரை செய்கிறோம் என கூறினர். இதன் காரணமாக போராட் டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டது. இந்நிலையில், ஏப்.6 ஆம் தேதி யன்று சட்டமன்றத்தில் ராசிபுரத்தில் மினி தொழில்நுட்ப பூங்கா அமைக் கப்படும் என அமைச்சர் தெரிவித் தார். எனவே வருவாய் துறை அதி காரிகளை கண்டித்தும், கல்லூரி விளை யாட்டு மைதானத்தில் அமைய இருக் கும் மினி தொழில்நுட்ப பூங்காவை மாற்று இடத்திற்கு அமைக்க கோரி யும், திங்களன்று முதல் தொடர்  வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாணவர் சங்கம் அறிவித்தது.

இந்நிலையில், திங்களன்று மாணவர், மாணவிகள் வகுப்பிற்கு  செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது பேச்சுவார்த் தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில், மாநிலங்க ளவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ராசிபுரம் காவல் கண் காணிப்பாளர் செந்தில்குமார், ஆய் வாளர் சுகவாணன், கல்லூரி முதல் வர் பானுமதி மற்றும் இந்திய மாண வர் சங்க மாவட்ட தலைவர் மு.தங்க ராஜ், செயலாளர் டி.சரவணன் 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில், விளை யாட்டு மைதானத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டால், மாற்று  இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும் என  ராஜேஷ் குமார் எம்.பி., தெரிவித்தார். ஆனால், மாணவர் சங்கத்தினர் கல்லூரி வளா கத்திற்கு உள்ளே இந்த தொழிற் பூங்கா வர வேண்டாம் என உறுதி யாக தெரிவித்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடை பெறும் நிலையில், போராட்டம் என் பது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட் டுள்ளதாக மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவர் சங்க நிர்வாகிகள் கூறுகை யில், விளையாட்டு மைதானத்தில் தான் தொழில் நுட்ப பூங்கா அமைக் கப்படும் என அதிகாரப்பூர்வ அரசு  அறிவிப்பு வெளியிட்ட பின்னர் அடுத்த கட்ட தொடர் போராட்டம் நடத்து வது குறித்து முடிவு எடுக்கப்படும், என்றனர்.